அஜித்தை போல ஒரு சிறந்த மனிதரை பார்க்கவே முடியாது – வலிமை படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை சொல்லும் இளம் நடிகை.!

தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அஜித் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வந்தாலும் வசூலில் குறைச்சல் இல்லாமல் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி.

அஜித் கேரியரில் அதிக வசூல் வேட்டை நடத்திய படமாக மாறியது. மீண்டும் வலிமை படத்தின் குழுவுடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெறும் மூன்றே மாதங்களில் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வலிமை படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவர் அஜித் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். அதன்படி வலிமை படத்தில் போலீஸ் டிபார்ட்மெண்டில் அஜித்திற்கு உதவும் படி இரண்டு பெண் போலீஸ் இருந்தார்கள். அதில் ஒருவர் பெர்லி மற்றும் இன்னொருவர் சின்னத்திரையில் பிரபல நாயகி சைத்ரா ரெட்டி.

இதில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெர்லி அஜித் பற்றி கூறுகையில் “அஜித் செட்டில் சூட்டிங்கை தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் எங்களைப் பற்றியும் எங்கள் வீட்டு உறுப்பினர்கள் பற்றியும் கேட்டு விசாரிப்பார். மேலும் அவர் கூறுகையில் அஜித் சார் பெண்களை மிகவும் மதிப்பார். அங்கு பெண்கள் எல்லோரும் உட்கார நாற்காலி இருக்கும் ஒருநாள் நான் உட்கார நாற்காலி இல்லாமல் இருந்தது.

அப்போது அஜீத் சார் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை கொடுத்து என்னை உட்கார வைத்து அவர் நின்று கொண்டிருந்தார் பின்பு அவருக்கு வேறு ஒரு நாற்காலி வந்தது. மேலும் சூட்டிங்கில் ஏதாவது ரீடேக் ஆனால் அதற்கு இட்ஸ் ஓகே, நோ ப்ராப்ளம் என கூறுவார் ஆனால் அவருக்கு சூட்டிங்கில் ரீடேக் ஆனால் சாரி கேட்பார் என பல சுவாரசிய தகவல்களை பெர்லி பகிர்ந்துள்ளார்.

Leave a Comment