இந்த வாரம் டபுள் எவிஷன் இருக்குது.? வெளியேற போகும் அந்த போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கோலாகலமாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இவை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது பாதி கட்டத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது 68  நாட்கள் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி பயணித்துக் கொண்டிருக்கிறது.

வாரவாரம் எலிமினேஷன் ரவுண்ட் இருப்பதால்  ஒருவரை ஒருவர் குறை சொல்லி அவர்களை நாமினேஷன் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த வாரமும் 6 பேர் நாமினேஷன் ரவுண்டில் சிக்கினர். அண்ணாச்சி, அபிநய், சிபி, அக்ஷரா, நிரூப், அமீர் ஆகிய போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

தற்போது இதில் மக்கள் மத்தியில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பவர் வெளியேற்றப்படுவார் அப்படித்தான் இதுவரை நடந்து வந்துள்ளது. இந்த தடவை டபுள் எவிக்ஷன் எனவும் இரண்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அந்த வகையில் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கிய  அபிநய் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

மேலும் சிபியும் கூட திடீரென குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேற வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒருபக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் யார் வெளியேறுவார்கள் என்பது சற்றும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் ஒவ்வொருவரும் நாற்பது ஐம்பது ஓட்டு வித்தியாசத்தில் தான் இருக்கின்றன அதனால் அப்படி ஒரு சூழல் நிலவுகிறது.

Leave a Comment

Exit mobile version