இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போகபோறது இவரா.? புதிய ட்விஸ்ட் வைத்த மக்கள்.!

உலக நாயகன் கமலஹாசன் வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து அசத்துகிறார் அந்த வகையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

நான்கு வருடங்கள் சிறப்பாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த சீசனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருநங்கை நமிதா மாரிமுத்து போன்றவர் கலந்து கொண்டுள்ளது பிக்பாஸ் வீட்டிற்கு வரவேற்பு தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அவர் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல் சில காரணங்களால் வெளியேறினார் அவரைத் தொடர்ந்து அபிஷேக், நாடியா சாங், ஆகியோர்கள் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷன் ரவுண்டு இருப்பதால் இப்பொழுது யார் வெளியேறுவார்கள் என்பதே மிகப்பெரிய ஒரே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏனென்றால் எல்லோரும் திறமையாக விளையாடுவதால் வெளியேறப் போவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மக்கள் ஒரு சிலருக்கு குறைந்த ஓட்டுகளை கொடுத்திருந்தனர் அந்த வகையில் சின்ன பொண்ணு, அபிநய் ஆகியோர்கள் மிகக்குறைந்த ஓட்டுகளைப் பெற்று இருந்தனர் இவர்களில் யாரேனும் ஒருவர் வெளியேற போவது கண்பார்மாக இருந்தது.

தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் போட்டியாளர்களின் மிகக்குறைந்த வாக்குகளை சின்னப்பெண் அவர்கள்தான். இந்த வாரம் பிக் பாஸ் எலிமினேஷன் மூலம் வெளியேற போகிறார் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version