பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவரா.? அதிர்ச்சியில் மக்கள்.

சமீப காலமாக நாம் எதிர்பார்க்காத நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொலைக்காட்சியை கொடுத்து வருகிறது அந்த வகையில் மாஸ்டர் செஃப், சர்வைவர் ஆகியவற்றை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை 70 நாட்களை கடந்து விட்டது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் வைல்ட் கார்டு  மூலம் மூன்று பேர்கள் கலந்து கொண்டனர். இப்படி இருந்தாலும் பல்வேறு போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் சுவாரசியம் இல்லாத நபராக கருதப்பட்டு வெளியேறி உள்ளனர்.

இப்பொழுதே மொத்தம் பதினொரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். கடந்த வாரம் மக்கள் மனதில் பிரபலமாக இருந்த இமான் அண்ணாச்சி திடீரென வெளியேறினார். இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்டு இருக்கிறது. அனைத்து நபர்களும் நாமினேஷன் ஆகியுள்ளதால்  இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கருதப்படுகிறது.

இதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது அந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முதல் இடத்தைப் பிடிக்கும் பிரபலங்கள் எலிமினேஷன் ரவுண்டில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியே போகப் போகிறார் என்பது சரியாக கணிக்கப் படவில்லை.

இருப்பினும் குறைந்த வாக்குகளை தற்பொழுது இரண்டு நபர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் அந்த வகையில் அபிநய் மற்றும் அமீர் இருக்கின்றனர். இவர்கள் தான் சரியாக வெளியே வருவார்கள் என்பது நாம் ஆரம்பத்திலேயே கணிக்க முடியாது இன்னும் இருக்கின்றன நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எதிர்பார்க்காத நபர்கள் கூட வெளியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment