கோமதி தன்னை மாமியாராக உணர்ந்த தருணம்.. படாத பாடுபடும் தங்கமயில், அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு.?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் செய்த வேலை தெரிய வந்ததும் பாண்டியனும் கோமதியும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். மற்றவர்கள் கூட இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மாமனார் மாமியார் என்ற கெத்தை அவர்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் பாண்டியன் ஒரு பக்கம் மருமகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார். இன்னொரு பக்கம் பார்த்தால் கோமதி மயிலிடம் தன் கோபத்தை வேறு மாதிரியாக காட்டுகிறார். அதிலும் இன்றைய எபிசோடில் தேடி வந்து பேசும் மருமகளிடம் அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக பேசுவதையே கோமதி ஒரு வேலையாக வைத்திருக்கிறார். இதனால் மீனா ராஜி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி இருக்கின்றனர்.

அதில் தங்கமயில் சமையலுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் பாத்திரத்தை போட்டு உடைக்க கோமதி அதையே பிடித்துக் கொண்டார். நீ எதுவும் செய்ய வேண்டாம் போய் ரெஸ்ட் எடு என திட்டி அனுப்பி விடுகிறார்.

கிட்டத்தட்ட கோமதி தன்னை மாமியார் ஆக உணர்ந்த தருணம் தான் இது. அதையே மீனாவும் சொல்கிறார். கடுகடுவென இருக்கும் மாமியாரை பார்த்து சின்ன மருமகள்கள் இருவரும் கொஞ்சம் மிரண்டு தான் போகின்றனர்.

அதேபோல் ராஜியின் வீட்டில் அவரால் ஒரு சண்டை நடக்கிறது. இரு மகன்களும் சண்டை போடுவதை விரும்பாத அப்பத்தா குறுக்கே வந்து தடுக்க நினைக்கிறார். அதற்குள் நெஞ்சு வலி வந்து விட குடும்பமே பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடுகிறது.

திடீரென வீடு பூட்டி இருப்பதால் கோமதியும் ராஜியும் என்னை ஏது என தெரியாமல் இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் பிறகு பல சென்டிமென்ட் காட்சிகள் சீரியலில் அடுத்தடுத்து அரங்கேற இருக்கிறது.