மனைவியின் வளைகாப்பு பங்ஷனில் தாறுமாறாக இறங்கி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகர் வினோத் பாபு.! வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய நிகழ்ச்சி மற்றும் புதுப்புது சீரியல் என ஒளிபரப்பி தங்களது டிஆர்பி யில் மாற்றங்களைக் கொண்டுவந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ மற்றும் புதிய சீரியல்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்  அப்படியிருக்கும் நிலையில் சமீபகாலமாக படத்தின் தலைப்பில் பல சீரியல்களை ஒளிபரப்பி வெற்றிகண்டு வருகிறது ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ இந்த சீரியலில் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகியவற்றின் பின்னணியில் உருவாகி உள்ளது சீரியலை அப்துல் கபீஸ் என்பவர்தான் இயக்கியுள்ளார்.  மேலும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்துள்ளார்.

இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.  இந்த நிலையில் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வினோத் பாபு ஆரம்ப காலகட்டத்தில் நடன கலைஞராக தான் இருந்தார் அதன்பிறகு காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் என தனது பணியை தொடர்ந்து வந்தார் என்னதான் இவர் பல நிகழ்ச்சிகளில் நடித்து இருந்தாலும் இவர் பிரபலமானது சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம்தான்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென திருமணம் நடைபெற்றது தற்பொழுது அவரின் மனைவி கர்ப்பமாக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் வளைகாப்பு நடத்தி  உள்ளார்கள், அந்த  வளைகாப்பு நிகழ்ச்சியில் மேடையிலேயே வினோத் பாபு மரண குத்தாட்டம்போட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version