வேறு ஒரு சீரியலில் களம் இறங்கிய பாரதி கண்ணமா சிரியல் பிரபலம்.!

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகி வேறு ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் 2.

இந்த சீரியலில் செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார். முழுக்க முழுக்க இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம் காலகட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த இந்த சீரியல் கொரோனா தாக்கத்திற்கு பிறகு வேறு கதையை மையமாக வைத்து ஒளிபரப்பானது.

இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி ரட்சிதா மகாலட்சுமி நடித்து வந்தார். சமீபத்தில் இவர் விலகியதால் தற்போது இரட்டை கிளி சீரியல் நடிகை நடித்து வருகிறார். சமீப காலங்களாக மகா கர்ப்பமாக இருப்பதால்  இவர்களுக்கு இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர்களை தொடர்ந்து மாயனின் நண்பனாக நடித்த ராஜு ஜெயமோகனின் காமெடி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தான் ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பிக்பாஸ்நிகழச்சிக்கு பிறகு தற்போது வரையிலும் இந்த சீரியலில் இதுவரையிலும் ராஜு நடிக்கவில்லை. இதற்கு மேல் இவர் சீரியலில் நடிப்பாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

எனவே தற்பொழுது காமெடிக்கு இந்த சீரியலில் ஆள் இல்லாத காரணத்தினால் புதிய நடிகர் ஒருவரை அறிமுகம் செய்ய உள்ளார்கள். அந்தவகையில் மாயனின் மாமன் மகன் என்ற கேரக்டரில் பிரவீன் ராஜ் தேவசகாயம் நடிக்க உள்ளார்.

naam iruvar namaku iruvar
naam iruvar namaku iruvar

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் துர்கா என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு முன்பு ஈரமான ரோஜாவே, அழகர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிகண்ணம்மா சீரியலில் இவருக்கு சமீப காலங்களாக நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை என்பதன் காரணமாக பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனரான பிரவீன்  நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிக்க வாய்ப்பு கொடுக்க உள்ளார்.

Leave a Comment