சந்தியாவின் கனவை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியேற உள்ள சரவணன்.! அதிர்ச்சியில் சிவகாமி.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, சந்தியாவின் கனவை தெரிந்துகொண்ட சரவணன் அதை எப்படியாவது நிறைவேற்றி தன் மனைவியை ஒரு போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட வேண்டும்.உறுதியாக இருக்கிறார் சரவணன்  இதை தனது அம்மா சிவகாமி சம்மதத்துடன்  நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்

இருப்பினும் சிவகாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அம்மா சிவகாமியை சமாதானப்படுத்தி எப்படியாவது தன் மனைவி சந்தியாவை
போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட வேண்டும். என்று சரவணன் போராடுகிறார்.

ஆனால், இதற்கு சிவகாமி ஒருபோதும் சந்தியாவை போலீசாக அனுமதிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். இவ்வாறு சரவணன் சந்தியாவை போலீஸ் அதிகாரியாக மாற்ற நினைப்பதை தடுப்பதற்காக சந்தியாவை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார். சிவகாமி

நீ போலீசாக விரும்புகிறேன். என சரவணனிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்க அதற்கு முன்பு நீ ஒரு குடும்ப பெண்ணாகவும், சரவணனுக்கு ஒரு நல்ல மனைவியாகவும், உன்னுடைய கடமை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை முதலில் நிறைவேற்று என கோயிலில் அமர்ந்தபடியே கூறுகிறார். சிவகாமி

கோவிலில் இருந்து வீடு திரும்பிய சந்தியா வீட்டுக்கு வந்தவுடன் தன்னுடைய அப்பா அம்மா போட்டோவை கையில் எடுத்துக் கொண்டு அவர்களது கனவை நிறைவேற்ற முடியாது என்று அழுகிறாள். இதை வெளியில் நின்று பார்த்து கொண்டிருக்கிறான். சரவணன்

பிறகு சரவணன் சந்தியாவிடம் உங்கள் கனவு நிறைவேறுவதில் மட்டும் உறுதியாக இருங்கள் நான் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன். என்று உறுதியளிக்கிறார், இதன்பிறகு சந்தியா ஐபிஎஸ் ஆகும்வரை வீட்டை சரவணன் பல துன்பங்களை சந்திக்க காத்திருக்கிறான்.

இவ்வாறு போற போக்கை பார்த்தால் சரவணன் தனது குடும்பத்தை விட்டுவிட்டு தனியாக வந்து சந்தியாவின் கனவை நிறைவேற்றுவதற்காக போராடுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment