வட்டிக்கு கேட்டட்டும் பணம் தர முன்வராத வட்டிக்காரர்கள்.! என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஜீவா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களைப் பெற்று வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சமீபத்தில் எதிர்பாராத அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சுக்குநூறாக உடைந்து உள்ளது.

அதாவது முல்லைக்கு இயற்கையாக குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் ரூபாய் 5 லட்சம் செலவு செய்து ட்ரீட்மென்ட் செய்தனர்.  இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேரும் இடத்தில் மீனாவின் அப்பாவால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

எனவே கதிர் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதன் காரணமாகத் தற்பொழுது மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ள நிலையில் இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது உடனே 2 லட்சம் மருத்துவமனையில் கட்டினால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம் என்று டாக்டர் கூறியதால் ஜீவா  வட்டிக்கு வருபவர்களிடம் போன் செய்து பணம் கேட்டாலும் தற்போது பணம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா மருத்துவமனைக்கு வர என்கிட்ட பணம் கேட்டா நான் தர மாட்டேனா என் மாப்பிள்ளை கண்டவன் கிட்டலாம் கேட்கணுமா என்று கூறுகிறார். பிறகு ஜீவா இந்த இரண்டு லட்சம் பணத்துடன் வட்டியையும் சேர்த்து உங்களுக்கு தந்துவிடுகிறேன் என்று கூற பிறகு மீனாவின் அப்பா மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாவை கட்டுகிறார்.

Leave a Comment