மீனாவின் அப்பா ஏத்தி விட அதிகமாக குடித்துவிட்டு மூர்த்தியிடம் சண்டை போடும் ஜீவா.! இரண்டாக பிரியும் குடும்பம்..

விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகிப்பது வழக்கமாக வைத்திருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில் நாள்தோறும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்  சீரியலில் தற்பொழுது முல்லைக்கு இதற்கு மேல் எப்போதும் குழந்தையே பிறக்காது என்று டாக்டர் கூறியதால் குடும்பமே மனக் கஷ்டத்துடன் இருந்து வருகிறது அதோடு முல்லையும் வருத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் அழுதுகொண்டே இருக்கிறாள்.

இதன் காரணமாக மூர்த்தி புது வீடு கட்டுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்.ஏனென்றால்  அந்த பணத்தை வைத்து அதிக செலவு செய்து எப்படியாவது முல்லைக்கு குழந்தை பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் முடிவு செய்துள்ளார்கள் இதன் காரணமாக இன்னும் சில வருடங்கள் கழித்து வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு மீனா ஏற்றுக்கொள்ளவில்லை தற்பொழுது வீடுகட்டும் இன்னும் சில வருடங்கள் கழித்து முலைக்கு ட்ரீட்மெண்ட் செய்யலாம் என கூறுகிறாள்.இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஜீவாவை தனது குடும்பத்தில் இருந்து முழுமையாக பிரித்து மீனா அப்பாவின் கடைகள் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை ஜீவாவின் பெயரில் எழுத வேண்டும் என்றும் பல திட்டங்களை மீனாவும் அவளின் அப்பாவும் செய்து வருகிறார்கள்.

எனவே மூர்த்தியும் இதற்கு மேல் உன் மாமனாரின் கடையை மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வரவேண்டாம் நான் கண்ணன், கதிர் அனைவரும் பார்த்துக் கொள்கிறோம் என்று கூற ஜீவா மிகவும் வருத்தம் அடைகிறான்.

பிறகு இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா திருச்சி வரையும் போயிட்டு வாங்க என்று கூற ஜீவா நான் அண்ணன் அண்ணியிடம் கூறிவிட்டு போகிறேன் என கூறுகிறான் ஆனால் அதற்கு மீனாவின் அப்பா நீங்கள் தான் அவர்களை பற்றி நினைக்கிறீங்க அவங்க ஒரு போன் கூட பண்ணி கேட்கல என கூறுகிறார்.  எனவே ஜீவா வருத்தப் படுகிறான் பிறகு ஜீவா குடித்துவிட்டு மூர்த்தியிடம் போய் சண்டை போடுகிறான். இவனைத் தொடர்ந்து கஸ்தூரியும் முல்லை இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் இதுவே இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment

Exit mobile version