அதிரடியாக இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்திய பிரபல தொலைக்காட்சி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றை ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.

அதுவும் முக்கியமாக விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சில சீரியல்கள் டிஆர்பி -யில் முன்னணி வகித்து வரும் நிலையில் தற்பொழுது பிரபல சீரியல் ஒன்றின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது கூட்டுக் குடும்பத்தை மையமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசம் உறவு மற்றும் கணவனின் தம்பிகளை தனது குழந்தை போல் பாத்துக் கொள்ளும் அண்ணி, மருமகள்களின் ஒற்றுமை போன்றவற்றை வைத்து ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

இவ்வாறு நான்கு கண்ணன் தம்பிகளின் திருமணம் பல தடைகளுக்கு பிறகு நடந்து முடிந்தது இதனைத்தொடர்ந்து சின்ன மல்லிகை கடை வைத்திருந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை கட்டினார்கள். பிறகு தற்பொழுது இந்த சீரியல் இயக்குனர் இதற்கு மேல் வேறு கோணத்தில் காண்பிக்க முடிவு செய்துள்ளார். அந்தவகையில் இரண்டாம் பாகத்தில் முல்லை மற்றும் கதிர் இவர்களின் கேரக்டர்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த பாகத்தில் கதிர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். கதிரின் பிரிவை தாங்க முடியாமல் முல்லை கதறுகிறாள். இவ்வாறு முல்லை மற்றும் கதிரின் ஏன் பிரிந்தார்கள், கதிர் எதற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு முல்லையை ஒதுக்குகிறான் என்பதை மையமாக வைத்து தான் இந்த சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment