பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாம் பாகத்தில் தனம் கேரக்டரில் சுஜாதாவுக்கு பதிலாக இனிமேல் இவர்தான்.! புகைப்படத்துடன் இதோ.

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் சீசன் முடிந்த இரண்டாவது சீசன் திடீரென்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது.

இவ்வாறு நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று சீரியலின் கதையை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக சீரியலின் இயக்குநர் முடிவு செய்து தற்போது இரண்டாவது சீசனில் ஒளிபரப்ப உள்ளார். எனவே இதில் சில நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்கள் மாற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதற்கு மேல் கதிர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு முல்லையை ஒதுக்கி வைக்கவுள்ளான்.

அதற்கான காரணத்தினை கூறும் வகையில்தான் இரண்டாவது பாகம் அமையவுள்ளது அப்படிப் பார்க்கும் பொழுது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரம் விளங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று இந்த சீரியலில் இருந்து சுஜாதா விலக இருப்பதாகவும் இவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சுஜாதா தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர நடிகையாகவும் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்துதான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

அதாவது தற்பொழுது தனம் கேரக்டரில் சுஜாதா நடித்துவரும் கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தலைவியாக நடித்துவரும் சுசித்ரா தான் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்தத் தகவல் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் இதற்கு மேல் சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க மாட்டாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனை குறித்து சரியான தகவல் வெளிவரவில்லை கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment