ஆபத்தான கட்டத்தில் அப்பத்தா.. அதிர்ச்சியில் கோமதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பத்தா நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து விடுகிறார். அவரை குடும்பமே பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் இது எதுவும் கோமதிக்கு தெரியவில்லை.

மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷயம் கேள்விப்பட்ட பழனி செந்திலுடன் மருத்துவமனைக்கு அடித்துப் பிடித்த ஓடுகிறார். அங்கு அப்பத்தா இன்னும் மயக்க நிலையில் தான் இருக்கிறார்.

இந்த விவரத்தை செந்தில் பாண்டியன் மீனா கதிர் ஆகியோரிடம் கூறுகிறார். ஆனால் கோமதிக்கும் ராஜிக்கும் தெரியாது. எப்படி சொல்வது என செந்தில் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீனா வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இருவருக்கும் ஏற்கனவே விஷயம் தெரியும் என மீனா, கதிர் எதார்த்தமாக பேச போய் அப்பத்தாவின் நிலைமை கோமதிக்கு தெரிய வருகிறது. அதிர்ச்சியில் ராஜியும் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என கேட்கிறார்.

இதனால் கதிர் மீனா செந்தில் ஆகியோர் பயந்தபடி நிற்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் அப்பத்தா ஆபத்து கட்டத்தை தாண்டி பிழைத்து விடுகிறார்.

அவருக்கு கோமதி சாப்பாடு கொடுத்து விடுவதும் பாண்டியன் அதற்கு கோபப்படாமல் சம்மதிப்பதும் என இந்த வாரம் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கோமதியின் அண்ணன்கள் அடுத்து என்ன பிரச்சனை செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை.

ஆனால் பாண்டியன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம் தான். இப்படி இந்த வாரம் முழுவதும் சென்டிமென்ட் காட்சிகள் அரங்கேற இருக்கும் நிலையில் சில திருப்பங்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version