என்ன கொடுமை சரவணா இது.. தனி மரமான தங்கமயில், பாண்டியன் கொடுத்த அட்வைஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் முழுவதும் தங்க மயிலின் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தேனிலவுக்கு சென்றபோது நடந்த காசு விவகாரம் தற்போது பாண்டியனுக்கு தெரிந்து விட்டது.

கதிர் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும் அவருடைய கோபம் மருமகள் மீது திரும்புகிறது. பாண்டியனுக்கு போட்டியாக கோமதியும் தங்க மயிலை உதாசீனப்படுத்தி விடுகிறார். இதனால் தனிமரம் ஆன தங்கமயில் புருஷனாவது நம்மை சமாதானப்படுத்துவார் என எதிர்பார்க்கிறார்.

ஆனால் சரவணனும் டீலில் விட்டு விடுகிறார். இதனால் மீனா இருவரையும் சேர்த்து வைக்க டிபனை சரவணன் கையில் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் ஏதோ கடமைக்கு அதை கொண்டு செல்லும் சரவணன் மயிலிடம் கொடுக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரம் பிகு பண்ணுவோம் என தங்கமயில் நாடகத்தை தொடர்கிறார். ஆனால் சரவணன் கண்டு கொள்ளவில்லை. இதனால் உணவை சாப்பிடாமல் அழுதபடியே படுத்து இருக்கிறார் தங்கமயில்.

அப்போது வரும் சரவணன் சாப்பாடு அப்படியே இருப்பதை பார்த்து அவரே அதை சாப்பிட்டு விடுகிறார். இதனால் நொந்து போன தங்கமயில் மீனாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதேபோல் சரவணன் சாப்பாட்டுக்காக அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அதனால் அதை வீணாக்காமல் நானே சாப்பிட்டேன் என மீனா செந்திலிடம் கூறுகிறார். உன் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லையா, என்ன கொடுமை சரவணா என்பதுதான் இருவரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும்.

இப்படியாக நகரும் இன்றைய எபிசோடில் பாண்டியன் மூத்த மருமகளுக்கு குடும்பத்தை பற்றி அட்வைஸ் கொடுக்கிறா.ர் ஏற்கனவே நொந்து போன தங்கமயில் இன்னும் வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.

பண விஷயத்திற்கே இவ்வளவு கோவப்படும் பாண்டியன் குடும்பம் இன்னும் மயில் செய்த திருட்டு வேலைகளை தெரிந்தால் என்ன செய்வார்களோ தெரியவில்லை. அந்த காட்சிகள் எப்போது வரும் என ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 

Exit mobile version