TRP யில் முன்னேற புதிய நிகழ்ச்சியை நடத்த போகும் விஜய் டிவி.! எந்த மாதிரியான ஷோ தெரியுமா.? கொண்டாடத்தில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் வாரத்தின் முதல் ஐந்து நாட்களில் காலை முதல் இரவு வரை பலவித சீரியல்களை வழங்கி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற மாதம் தொடங்கப்பட்டு தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோக வார இறுதி நாட்களில் பொழுதுபோக்குக்காக மக்களை குதுகல படுத்த பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கடந்த 2 சீசன்களாக பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். அவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த சீசனை மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடந்து முடிவடைய முடிவடைய வேறு புது நிகழ்ச்சிகளை விஜய் டிவி களமிறக்கி வருகின்றன.

அதுபோல் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடித்து வந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி சென்ற வாரம் முடிவடைந்து உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டார். மேலும் இந்த ஷோவில் டிஎஸ்கே மற்றும் சுனிதா டைட்டில் வின்னர் ஆனார்கள். பாலா மற்றும் ரித்திகா ரன்னர் அப் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியும் இறுதிகட்ட போட்டியை நோக்கி பயணிக்கின்றது.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் முடிவடைய உள்ளது. இதனால்  மக்களை குஷிப்படுத்த சூப்பர் டேட் என்னும் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி தயாராக உள்ளது. இதற்குமுன் ஜீ தமிழில் சூப்பர் மாம் என்னும் நிகழ்ச்சி மிக பிரபலம் அடைந்தது. அதைப்போலவே சூப்பர் டேட் நிகழ்ச்சியும் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன யார் யார் என்ற செய்தி இன்னும் வெளிவரவில்லை. இந்த நிகழ்ச்சியின் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version