தன்னுடைய புருஷன் கல்யாணத்துக்கு பாக்யாவை அழைக்கும் மையூ.! ராமமூர்த்தி எடுத்த விபரீத முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது விவாகரத்து முடிந்த கையோடு கோபி ராதிகாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ள நிலையல் மிகவும் சந்தோசத்தில் இருந்து வருகிறார். தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் இருந்து வரும் கோபி தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமல் இருந்து வரும் நிலையில் அவருக்கு தற்பொழுது இரண்டாவது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இதனைத் தெரிந்துக்கொண்ட கோபியின் அம்மா, அப்பா இருவரும் இந்த தவறை மட்டும் செய்து விடாதே என கெஞ்சுகிறார்கள். மேலும் ஒரு கட்டத்திற்கு பிறகு எப்படி இந்த திருமணம் நடக்கிறது என்பதை பார்க்கலாம் என கோபியிடம் சவால் விடுகிறார்கள் இதனைப் பற்றி கோபியின் அப்பா தீவிரமா சிந்தித்து வரும் நிலையில் அப்பொழுது தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டால் ஒருவேளை இந்த கல்யாணம் நின்று விடுமோ என்ற முடிவை எடுக்கிறார்.

மேலும் கோபி ராதிகாவின் திருமணம் பற்றிய செய்தி ராதிகாவின் மகள் மூலம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில் ராதிகா, கோபி அவர்களுடைய திருமணத்தில் சமைப்பதற்கான ஆர்டர் பாக்கியாவிற்கு கிடைத்துள்ளது. எனவே பாக்கியா மிகவும் நன்றாக சமைத்து தரவேண்டும் என்றும் அப்பொழுது தான் அடுத்தடுத்து சமையல் ஆடர்கள் கிடைக்கும் எனவும் யோசிக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கட்டுன புருஷன் கல்யாணத்துக்கு சமைத்து தரும் நிலைமை வந்துள்ள நிலையில் அதனை நினைத்து கலங்குகிறார். தன்னுடைய 25 வருடங்களாக பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்த கோபி இன்னொரு கல்யாணத்தை செய்து கொள்வதைப் பற்றி எல்லாம் அவர் பெரிதாக கவலைப்பட மாட்டார். ஏனென்றால் இவ்வாறெல்லாம் நடக்கும் என தெரிந்ததுதான் பாக்யா விவாகரத்து கொடுத்துள்ளார்.

ஆனால் இவர்களுடைய அப்பா அம்மா மற்ற பிள்ளைகள் தான் மிகவும் வருத்தப்படுவார்கள். இவ்வாறு சொந்த பொண்டாட்டியே தன்னுடைய புருஷன் கல்யாணத்துக்கு சமைப்பது போல் கொண்டு செல்வதால் பாக்கியலட்சுமி சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment