ராதிகா வீட்டிற்கு இனியாவை அழைத்துச் சென்ற கோபி.! பரபரப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சு.மி தற்போது இந்த சீரியல் கோபி ராதிகா இவர்களுடைய திருமணத்தின் ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதனால் கோபி தன் அம்மா மற்றும் மகள் இருவரின் மீதும் அதிக பாசம் வைத்திருக்கும் நிலையில் அவர்களை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கோபி தன்னுடைய அம்மாவை கோவிலில் சந்திக்க அங்கு அவரிடம் நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி இந்த கல்யாணத்தை நீ எப்படி நடத்துறேன்னு பார்க்கிறேன் என சவால் விடுகிறார். இதோடு முடிந்த நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய மகள் இனியாவை வெளியே அழைத்து செல்கிறார் அங்கு தனது அம்மா பாக்யாவுக்கு போன் செய்து என்னை தேட வேண்டாம் நான் அப்பாவுடன் வெளியே செல்கிறேன் என திமிராக பேசுகிறார்.

பிறகு வீட்டிற்கு முன்பு கோபி காரை நிறுத்த யார் வீடு என்று இனியா கேட்க உனக்கு தெரிஞ்சவங்க தான் என சொல்கிறார் கோபி.மையூ இனியா அக்கா என்று ஓடி வருகிறார்‌ மயூவை பார்த்தவுடன் இனியாவிற்கு முகம் மாறுகிறது இனியா வீட்டிற்குள் வர இதனை பார்த்த ராதிகா மகிழ்ச்சி அடைகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் இனி யார் அப்படியே இருக்கிறார்.

இந்த நேரத்தில் ராதிகாவின் அண்ணன் யார் இந்த பொண்ணு என கேட்க அதற்கு ராதிகா கோபிவுடைய பொண்ணு தான் என கூறுகிறார் இது இனியாவிற்கு பிடிக்காத நிலையில் வீட்டில் தேடுவார்கள் நான் கிளம்புகிறேன் என கூறுகிறார் இவ்வாறு கோபி தன்னுடைய மகளை மாற்ற வேண்டும் என நினைத்தாலும் இனியா அதற்கு இடம் கொடுக்கவில்லை.

Leave a Comment

Exit mobile version