போட்டியில் ஜெயிச்சும் பாக்யாவிற்கு ஆர்டரை கொடுக்க யோசிக்கும் ஜட்ஜி.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாக்யலட்சுமி சீரியல்..

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியே போய் உள்ள நிலையில் பாக்யா அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் பெரிய ஆட்ர்ளுக்காக தற்போது பாக்யா இன்டர்வியூ சென்றுள்ளார் அங்கு இருப்பவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் எனவே அவர்களை பார்த்தவுடன் பாக்கியா பயப்படுகிறார் பிறகு எழிலுக்கு பாக்கியாவிற்கு தைரியம் சொல்லுகிறார் இதனால் பாக்கியாவும் கொஞ்சம் தைரியமாக சமாளிக்க தொடங்குகிறார் இவ்வாறு ஒட்டுமொத்த ஆண்கள் இருக்கும் நிலையில் ஒரே ஒரு சிங்க பெண்ணாக பாக்கியா செயல்படுகிறார்.

அந்த போட்டிக்கு வந்திருக்கும் 15 நபர்கள் ஐந்து நபர் ஒரு குழுவாக பிரிந்து 15 நிமிடத்திற்குள் ஒரு டிஷ் செய்ய வேண்டும் அந்த போட்டிக்கு வந்தவர் பலருக்கும் சமைக்க தெரியாது என்பதால் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகி விடுகிறார்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் அதில் பாக்யா கொடுத்த பொருள்களில் 15 நிமிடங்களில் சுவையான உணவை சமைத்துள்ளார்

ஜட்ஜ்க்கும் பாக்யாவின் உணவு மிகவும் பிடித்து விடுகிறது எனவே இந்த ஆர்டர் கொடுக்க விருப்பம் இருந்தாலும் ஒரே நேரத்தில் பத்திற்கு மேற்பட்ட திருமணத்தை எப்படி சமைப்பார்கள் என யோசிக்கிறார்கள் இந்த நேரத்தில் பாக்யா என்னால் சமாளிக்க முடியும் என சொல்கிறார் இது மட்டும் பாக்யா வெற்றிகரமாக மிகவும் சுவையாக சமைத்து விட்டால் பாக்கியாவிற்கு அந்த ஆர்டரை உறுதி செய்து விடுவார்கள்.

இன்று மட்டும் சமையலை சரியாக செய்து விட்டால் கண்டிப்பாக நமக்கு தான் இந்த வேலை கிடைக்கும் என உறுதியாக இருக்கிறார் பாக்யா இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment