கோர்ட்டில் சுயமரியாதையை இழந்து என்னால் வாழ முடியாது என விவாகரத்து பெற்ற பாக்கியா.! இதுக்கு மேல் கோபி ராதிகாவுடன் ஒரே ரொமான்ஸ் தான்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த நிலையில் சமீப காலங்களாக பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருப்பதால் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கோபி மற்றும் ராதிகாவின் உறவைப் பற்றிய அனைவருக்கும் தெரிய வந்துள்ள நிலையில் பாக்யா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். எப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாக்யா எழிலை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார் எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில் டிவோர்ஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு இன்றைக்கு கோட்டிற்கு போக வேண்டிய நாள் தானே போகலாம் என கூறிக் கொண்டிருக்கிறார்.

அனைவரும் போகாத டிவோர்ஸ் பேப்பரை கிழித்துப் போட்டு விடு என கூறிய பிறகும் இல்லை கண்டிப்பாக அவர் கேட்டதை நான் தரணும் என கூறிவிட்டு பல வசனங்களை பேசி வருகிறார் திரைப்பட ரேஞ்சிக்கு இவர் பல வசனங்களை பேசி வரும் நிலையில் பிறகு எழிலை அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்கு செல்கிறார் .

அங்கு கோபியும் வந்து விடுகிறார் அப்பொழுது ஜர்ச் உங்களுக்கு விவாகரத்து பெற விருப்பமா என பாக்யாவிடம் கேட்க முழு விருப்பம் எனக் கூறுகிறார் அதற்கு அந்த ஜர்ச் ஒரு ஆண் தனியாக வாழ்ந்து விடலாம் ஆனால் பெண்ணுக்கு ஆண் துணை தேவை எனக் கூற என்னால் மானம் கேட்டு வாழ முடியாது,என்னால் சுயமாக வாழ முடியும் என சில சனங்களை கூறி கோபியை இழிவு படுத்தும் படி பேச பிறகு விவாகரத்திற்கு சம்மதம் என கூறிவிடுகிறார் பாக்யா பிறகு கோர்ட்டும் இவர்களுக்கு விவாகரத்து தந்து விடுகிறது இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Leave a Comment