விஜய் சேதுபதியிடம் வந்த சம்மந்தி பஞ்சாயத்து.. புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா, பிக் பாஸ் 8 இன்றைய எபிசோட்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வாரம் தோறும் சுவாரஸ்யமாக இருந்தாலும் சனி ஞாயிறு எபிசோடு தான் கலைக்கட்டும். அதிலும் விஜய் சேதுபதி கடந்த வாரம் போட்டியாளர்களை முடிந்த அளவு வச்சி செய்து விட்டார்.

அவருடைய எந்த அதிரடியை எதிர்பார்க்காத போட்டியாளர்களும் வாயடைத்து போய் இருந்தனர். அதே சமயம் ஆடியன்ஸ் இப்பதான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கு என விஜய் சேதுபதிக்கு கூடுதல் வரவேற்பை கொடுத்தனர்.

அதனாலயே இன்றைய எபிசோடை காண ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்தது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சம்மந்தி பஞ்சாயத்து நாட்டாமையிடம் வந்திருக்கிறது.

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் சாப்பாட்டுக்கு எப்போதும் சில பிரச்சனை இருக்கும். ஆனால் இந்த சீசனில் அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்சிதா செய்த சம்மந்தி தான்.

அதை எனக்கு தரவில்லை என சாச்சனா கேள்வி எழுப்ப அது பெரும் விவாதமாக முடிந்து ரணகளமாக மாறி இருக்கிறது. இதை இன்று விசாரிக்கும் விஜய் சேதுபதி யார் பக்கம் தீர்ப்பு வழங்கப்போகிறார் என்று தெரியவில்லை.

ஆனால் சாச்சனாவின் மெச்சூரிட்டி இல்லாத பேச்சும் நடவடிக்கையும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது. அதை அவர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தர்ஷாவுக்கும் இன்று சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது.

தற்போது வெளியான ப்ரோமோக்களில் இது வெளிப்படையாக தெரிகிறது. இதனால் குஷியான ரசிகர்கள் தற்போது விஜய் சேதுபதியின் அதிரடி ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர்.

Exit mobile version