விஜய் எத்தனை ஹிட் படத்தை கொடுத்தாலும்.. அஜித்தின் மார்க்கெட்டை அவரால் ஒன்னுமே பண்ண முடியாது – பிரபல இயக்குனர் காரசார பேச்சு..

தமிழ் சினிமா உலகில் தற்போது நம்பர் 1 இடத்தை பிடிக்க அஜித்தும் விஜய்யும் ஒருபக்கம் படங்களில் கடினமாக உழைத்து வலம் வருகின்றனர். இவருக்கு அடுத்து தனுஷ் சிம்பு சூர்யா போன்ற பல நடிகர்களும் அந்த இடத்தைப் பிடிக்க இந்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்துகின்றனர்.

இதனால் அஜித்தும் விஜய்யும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பாக கொடுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதேபோல அஜித்தின் வலிமை இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளியானது ரசிகர்கள் மற்றும் மக்கள் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.

அதேபோல திரையரங்கில் படம் வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரி செய்தது அந்த அளவிற்கு வலிமை படத்தில் ஆக்ஷன்,சென்டிமெண்ட், திரில்லர் என மூன்றும் கலந்த இருந்தால்தான் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்து இழுத்தது. வலிமை படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 61, 62 ஆகிய திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.விஜய்யும் தனது அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் முரளி அப்பாஸ் கூறுகையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இப்பொழுதே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் விஜய், அஜித்திற்கு உள்ளது.

ஒரு காலத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு இனி எல்லாமே சிவாஜி தான் என பலரும் கூறினார்கள் ஆனால் சிவாஜி தொடர்ந்து கௌரவ வேடங்களில் நடிக்க அதன் பின்னிருந்த ரஜினி, கமல் வல்லவர்களாக மாறினார்கள். அதே போலவே தான் இப்பொழுது  விஜய் ஹிட் படங்களை கொடுத்தாலும்.. அஜித்குமார் நீக்கவோ.. குறைக்கவோ.. ஏன் அசைக்கக் கூட முடியாது என முரளி அப்பாஸ் பேசியுள்ளார்.

Leave a Comment