பாலா இயக்கிய வனங்கான் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை கூறிய தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர்  இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகள் பாலா இயக்கத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள் அதற்கு காரணம் ஒரு காட்சி என்றால் அதனை தத்துரூவமாக எடுக்க வேண்டும் என நடிகர் நடிகைகளை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி விடுவார்.

அந்த வகையில் பாலா இயக்கத்தில் வாங்கான் திரைப்படம் உருவாகி வந்தது முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யா தான் நடித்து வந்தார். ஆனால் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து சூர்யா டீசன்டாக விலகிக் கொண்டார் அவரை தொடர்ந்து அடுத்ததாக அருண் விஜய் தான் ஹீரோவாக நடித்து வந்தார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் 2.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வணங்கான் விமர்சனம்.

வணங்கான் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார் அதாவது தன்னுடைய சமூக வலைத்தளமான எக்ஸ் வலைத்தளத்தில் வணங்கான் திரைப்படத்தில் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது பாலாவுக்கு மிகப்பெரிய காம்பேக் படம் இது மொத்த குழுவும் ஒரு நம்ப முடியாத மேஜிக் செய்து இருக்கிறது என சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார் இதோ அந்த பதிவு.