நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை இதுதான்.! உண்மையை பகிர்ந்த பிரபலம்.. சோகத்தில் ரசிகர்கள்…

நடிகர் மயில்சாமி அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் இவருடைய இறப்பு திரைத்துறையினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 57 வயதாகும் மயில்சாமி தீவிர சிவபக்தர் அவர் இவர் நேற்று நடைபெற்ற சிவபூஜையில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் டிரம்ஸ் சிவமணி மயில்சாமியை பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் கடைசி நிமிடத்தில் மயில்சாமி கூறியது இதுதான் தற்போது கூறி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது மயில்சாமி அவர்கள் என்னிடம் மகாநதிஸ்வரர் கோவிலுக்கு என்னை அழைத்தார்.

ஆனால் நான் அந்த நேரத்தில் காளகஸ்தியில் இருந்தேன் அதன் பிறகு வடபழனி கோவிலில் வாசித்து விட்டு தீ நகர் செல்கிறேன் என்று கூறினேன் அதன் பிறகு எப்படியாவது நான் வந்து விடுகிறேன் என்று மயில்சாமியிடம் கூறினேன். கூறிய பிறகும் கால் மேல் கால் பண்ணி கொண்டே இருந்தார் கோவில் விஷயத்தில் மயில்சாமி எப்பொழுதும் கூப்பிட்டாலும் நான் போய் வாசித்துக் கொடுப்பேன்.

அதுமட்டுமில்லாமல் அவர் தான் என்னை திருவண்ணாமலை கோவிலில் வாசிக்க வைத்தார். அதன் பிறகு இன்று காலை 3 மணி வரைக்கும் நான் மயில்சாமி உடன் தான் இருந்தேன். அதுமட்டுமல்லாமல் அந்த சிவன் கோவிலில் நான் வாசிக்கும் போது எனக்காக மைக் பிடித்தார். நான் பாடும் போதும் என்னுடன் சேர்ந்து அவர் பாடினார் அப்போது நாங்கள் இருவரும் செம்ம ஜாலியாக இருந்தோம்.

அது மட்டுமல்லாமல் மயில்சாமி அண்ணன் அவர்கள் என்னிடம் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆசையையும் அவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார். அதாவது நடிகர் ரஜினி சாரை எப்படியாவது இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது அழைத்து வந்து அவரை இந்த சிவலிங்கத்தில் உட்கார வைத்து அவர் கையால் பால் ஊற்றுவதை நான் பார்க்க வேண்டும் அண்ணா என்று என்னிடம் கூறினார்.

ஏற்கனவே சின்ன கலைவாணர் விவேக் அவர்களை நான் இந்த கோவிலுக்கு அழைத்து வந்தேன் அதேபோல ரஜினி சாரையும் ஒரு முறையாவது அழைத்து வர வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார் என ட்ரம்ஸ் சிவமணி கூறியுள்ளார். இவர் கூறியது சினிமா பிரபலங்களை பலரையும் அழ வைத்திருக்கிறது.

Leave a Comment