இதான் சஸ்பென்சா பாரதி கண்ணம்மா சீரியலை வச்ச செய்யும் ரசிகர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த பாரதிகண்ணம்மா சீரியல் தற்பொழுது 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இயக்குனரும் கதையை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே போவதால் ரசிகர்கள் மத்தியில் சலப்பு உண்டாகியுள்ளது.

அந்த வகையில் கிட்டத்தட்ட தொடர்ந்து 40 எபிசோடுக்கு மேலாக கண்ணம்மாவின் பிறந்தநாளை மையமாக வைத்தே ஓடிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு பாரதி வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்திலேயே கடந்த சில வாரங்களாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வந்த ப்ரோமோவில் கண்ணம்மாவின் பிறந்தநாளிற்க்கு பாரதி வந்துள்ளான்.

இவ்வாறு கண்ணம்மா கேக் வெட்டுவதற்காக அனைவரும் கூடியுள்ளனர்.அந்த நேரத்தில் லக்ஷ்மி தன் அம்மாவிடம் யாரு என்னப்பா சொல்லுமா என கெஞ்சுகிறார். கண்ணம்மா மனதிற்குள்ளேயே பாரதியை நான் உன் அப்பா என்று சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறாள். பிறகு அனைவரும் அமைதியாக இருக்கும் நிலையில் பாரதி உடனே உனக்கு உன் அம்மா தான் எல்லாமே. உனக்காக உன் அம்மா எவ்வளவு தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் நீயேன் உன் அப்பாவை பார்க்க வேண்டும் என நினைக்கிறாய் என ஏதோ நோக்கத்துடன் பாரதி இதனை கூறுகிறான்.

என்னைக் கேட்டதும் லட்சுமி தனது அம்மாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள் பிறகு பாரதி கண்ணம்மாவை அனைவர் முன்பும் மிகவும் உயர்வாக பேசுகிறான். இவ்வாறு சஸ்பென்ஸ் என்ற பெயரில் இந்த சீரியலை ஜவ்வு போல இழுத்துக் கொண்டே போவதால் ரசிகர்கள் இயக்குனரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Leave a Comment