பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவரா.? தக் லைக் கொடுக்கப் போகும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அவ்வப்போது போராக இருந்தாலும் போட்டியாளர்கள் ஏதேதோ கன்டென்ட் கொடுத்து சுவாரஸ்யமாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சில போட்டியாளர்கள் இன்னும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இதில் கடந்த வாரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பவித்ரா இந்த வாரம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அதேபோல் சுனிதா சௌந்தர்யா சாச்சனா ஆகியோரும் பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்கவில்லை.

இதை இந்த வாரம் விஜய் சேதுபதி நிச்சயம் கேட்பார். இந்த நிலையில் இந்த வார எவிக்ஷனில் 10 பேர் சிக்கி இருக்கின்றனர். அதில் வீட்டுக்குள் சும்மா சுற்றி வரும் சௌந்தர்யாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.

அவருக்கு அடுத்ததாக விஷால் ரஞ்சித் தீபக் முத்துக்குமரன் ஜெப்ரி தர்ஷா குப்தா சாச்சனா ஜாக்லின் ஆகியோர் கணிசமான ஓட்டுக்களை பெற்றிருக்கின்றனர். இதில் கடைசி இடத்தில் இருப்பது ஆணழகன் அர்னவ் தான்.

பிக் பாஸ் வீட்டுக்குள் ஹீரோ ரேஞ்சுக்கு இவருடைய அலப்பறை பார்க்கவே சகிக்கவில்லை. ஆடியன்ஸ் கூட இவரை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். அதனாலேயே இவருக்கு இப்போது ஓட்டுக்கள் கிடைக்கவில்லை.

கடந்த வாரமே விஜய் சேதுபதி இவரை நாசுக்காக நக்கல் அடித்தார். ஆனாலும் இன்னும் திருந்தாமல் இவர் போலியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஆடியன்ஸ் விருப்பப்பட்டபடி இவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version