உலக நாயகன் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் மட்டும் நடிப்பதை தவிர்த்து விட்டு அரசியல் வியாபாரம் போன்றவற்றில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் எப்படியாவது கமலை வைத்து ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என ஏங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுதுதான் விக்ரம் படத்தின் கதையை கமலுக்கு கூறியுள்ளார்.
அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே கமலும் துணிந்து இந்த திரைப்படத்தில் நடித்தார் மேலும் இந்த திரைப்படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று அசத்தியது.
குறிப்பாக தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இதுவரை மட்டுமே கமலின் விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் படம் OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தது.
விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் போட்ட படங்கள் அனைத்தையும் முடுக்க ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 போன்ற படங்களில் முதலில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது அடுத்ததாக தேவர்மகன் 2 படத்திலும் நடிப்பார் என தகவல் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் கமல் பற்றிய பேச்சுக்கள் வெளிவந்து தான் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் உலக நாயகன் கமலஹாசன் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார். அவர் சொன்னது எனக்கு சினிமாவில் டெக்னீசியன்கள் மேல தான் எனக்கு மதிப்பு அதிகம். நடிகர்கள் எல்லாம் சும்மா மினிமீனுக்க தான் என பேசி உள்ளார்.