கண்மணிக்கு எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த வெற்றி.! தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் 29/6/23 இன்றைய எபிசோட்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடில் வெற்றி சுடரைத் தேடி போகும் இடமெல்லாம் அபி வருவதனால் வெற்றிக்கு சந்தேகம் ஏற்படுகிறது எனவே சித்தப்புக்கு போன் பண்ணி நம்ப பசங்க எல்லாம் பக்கத்துல இருக்காங்களா போன ஸ்பீக்கரில் போடுங்க எனக் கூற அந்து நேரத்தில் கண்மணியும் வருகிறார். வெற்றி அப்பொழுது என் நம்பரை வைத்துக்கொண்டு யாரோ நான் எங்க போனாலும் அபிக்கு இன்ஃபர்மேஷன் தராங்க ஆனா நானும் மாட்டக்கூடாது போன வேலையும் ஆகக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு செய்து வருவதாகவும் விரைவில் இதனை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூற கண்மணி நம்ம மாட்டிப்போமா என மனதில் நினைத்துக் கொள்கிறார்.

பிறகு கண்மணி போனில் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் பேச யார் அது கண்மணியா என வெற்றி கேட்க ஆமாம் என சித்தப்பு கூற அவள வச்சுக்கிட்டு ஏன் பேசுறீங்க என கடுப்பாகிறார். பிறகு கண்மணி இப்படி எல்லாம் பண்ண மாட்டா என சொல்கிறார் பிறகு யார் இவ்வாறு செய்கிறார் என்பதை  கண்டுபிடிங்கள் என கூறிவிட்டு போனை வைத்து விட மறுபுறம் சுடர் அபியிடம் பேச வேண்டும் என தொடர்ந்த நச்சரித்து வருகிறார். எனவே விஜியும் அபிக்கு போன் பண்ணி தர சுடர் எனக்கு போர் அடிக்குது எப்ப வருவ என கேட்கிறார்.

அதற்கு இன்னைக்கு வேலை முடிஞ்சுடுன்னு நினைச்சேன் ஆனா நாளைக்கு தான் முடியும் போல சீக்கிரமே வந்துடுவேன் என கூற பிறகு விஜியிடம் அபி பேசுகிறார். அதாவது வெற்றி சுடரை பற்றி தெரிஞ்சுக்கறதுக்கு எல்லா வேலையும் செஞ்சுகிட்டு இருக்கா அவனுக்கு சுடர் பற்றி எந்த விஷயமும் தெரியக்கூடாது தெரியறதுக்குள்ள அவனை அரெஸ்ட் பண்ணியாகணும் என சொல்கிறார். எனவே விஜியை வேண்டிக்குமாறு கூற பிறகு போனை வைத்து விடுகிறார்கள்.

விஜி அபிக்காக வேண்றதா வெற்றிக்காக வேண்டறதா என தெரியாமல் முழித்து வருகிறார். சுடர் இரண்டு பேரும் சீக்கிரம் வரணும் இரண்டு பேர் வேலையும் ஆகணும் என தான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக கூற அதெல்லாம் முடியாது ஒருத்தவங்க வேலைதான் முடியும் என விஜி சொல்கிறார். கண்மணி சீக்கிரம் போங்க வெற்றி அபி கிட்ட சொல்லனும்ல எனக் கூற வெற்றியும் கிளம்புகிறார்.

இதனால் கண்மணி மிகவும் மகிழ்ச்சி அடைய நடந்து செல்லும் நேரத்தில் வெற்றியிடம் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பையன் சுடர் பாப்பாவை பற்றி கேள்விப்பட்டேன் அதாவது சுடர் பாப்பா சின்ன வயசுல இருக்கும்பொழுது மூலக்காய்ச்சல் வந்துடுச்சாம் அப்பொழுது அனைவரும் அழுதுகட்டு இருந்தாங்களா ஆனால் தருண் டாக்டர் காப்பாற்றி விட்டாராம் அபி படிச்சது பிரசவம் பார்த்தது என அனைத்துக்கும் தருண் டாக்டர் தான் உதவி செஞ்சாங்களாம் அவங்க கிட்ட போய் கேட்டா தெரிஞ்சிடும் எனக் கூற வெற்றியும் ரொம்ப நல்ல விஷயம் வா போகலாம் என கூறிவிட்டு கிளம்புகிறார். அப்பொழுது தருண் சார் என்மேல் கோபமாக இருந்தாலும் கை காலில்லாவது விழுந்து கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டு செல்ல பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.

எனவே இதனால் கண்மணிக்கு வெற்றி எங்க போகிறார் என்பது தெரியவில்லை எனவே கடுப்பில் வெற்றிக்கு போன் போட அதன் பிறகு அவருக்கும் வெற்றி போன் சுவிட்ச் ஆப் செய்திருப்பது தெரிய வருகிறது. எனவே நான் எப்படி இப்ப அபிக்கு இன்ஃபர்மேஷன் தருவேன் என வருத்தப்படுகிறார். அபி கண்மணியிடமிருந்து இன்ஃபர்மேஷன் வரும் என்பதற்காக கபிலனுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் வெற்றி தருணின் வீடு பக்கத்து கிராமத்தில் இருப்பதால் அந்த பையனுடன் நடந்து செல்கிறார்.

அப்பொழுது தருண் டாக்டர் நல்ல மனுஷன் அபிக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காரு என நினைக்க பிறகு சுடர்தான் என்னுடைய மகள் என எனது உள்ளுணர்வு சொல்லுது இந்த ஆதாரமெல்லாம் சும்மா அபிக்காக மட்டும்தான் சுடர்தான் எனது மகள் என தெரிஞ்சுட்டா என்னுடைய உள்ளங்கையில் வைத்து ஊரையே சுற்றி வருவேன் நீ முதலில் நடந்தது, பேசினது, பால் வாசம் போய் சின்ன குழந்தையா, உனக்கு பல்லு முளைச்சது என எதையுமே நான் பார்க்கல எனவே இதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்து வச்சு உன்னை பத்திரமா பாத்துப்பேன் என சொல்ல பிறகு சுடரிடம் பேசுவது போல் என்ன அப்பா என கூப்பிடுவியா சுடர் என கேட்க சுடரும் அப்பா என கூப்பிடுகிறார் இவ்வாறு இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment