நம்பளோட உரிமைகள நாமதான் கேட்டு வாங்கணும் தேவைப்பட்ட புடுங்கி எடுக்கணும் வைரலாகும் ‘ரத்த சாட்சி’ ட்ரைலர்.!

சமீப காலங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் ‘ரத்த சாட்சி’ என்ற கதை படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தினை ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் கண்ணன் ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ, குமரவேல், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் மேலும் இந்த படத்தினை அனிதா மகேஸ்வரன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரத்த காட்சி திரைப்படம் மிக விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசரை பார்க்கும் பொழுது அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது மேலும் 1980களில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை எப்படி எல்லாம் கொடூரமாக வேலை பார்க்கிறார்கள் எவ்வளவு சித்திரவதை அனுபவிக்கிறார்கள் என்பதினை தெரியப்படுத்துகிறது இவர்களுக்காக ஒருவர் குரல் கொடுக்கிறார்.

அதில் அவர் நம்முடைய உரிமைகளை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து பிடுங்கிக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தமான வசனங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது மேலும் இருக்கிறவன் இல்லாதவன் அடிச்சா ஆண்டவனாய் இருந்தாலும் அடித்தான் என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உணர்ச்சிபூர்வமாக அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் ரத்த சாட்சி படம் உருவாகியுள்ளது.

Leave a Comment

Exit mobile version