பிரபல நடிகர் சக நடிகையுடன் லூட்டி அடித்ததால் ஆத்திரமடைந்து செருப்பால் அடிக்க முயன்ற மூன்றாவது மனைவி.!

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகர் நரேஷ் பாபு. இவர் வேற யாரும் இல்லை தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு அவர்களின் அண்ணன் ஆவார். நடிகர் நரேஷ் பாபு அவர்கள் இதுவரைக்கும் மூன்று திருமணம் செய்து உள்ளார்.

மேலும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷ் பாபு ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து பெற உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நடிகர் நரேஷ் பாபு விவாகரத்து பெறுவதற்கு முன்னர் நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் அவர் பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷை நாலாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சில தினங்களாக செய்திகள் பரவி வந்துள்ளது. நடிகை பவித்ரா லோகேஷ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார்.

naresh babu

நரேஷ் பாபுவின்  மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த காரணத்தால் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இதற்கு முக்கிய காரணம் பவித்ரா லோகேஷ் தான் என தெரிவித்துள்ளார் ரம்யா. ஒரு சில தினங்களுக்கு முன்பு எனக்கும் நரேசுக்கும் விவாகரத்து இன்னும் ஆகவில்லை என்று கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

naresh babu

இந்த சமயத்தில் நடிகர் நரேஷ் பாபு, நடிகை பவித்ராவுடன் மைசூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கிருப்பதை தெரிந்து கொண்ட ரம்யா அந்த இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு விரைந்து வந்த போலீசார் ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அப்போது ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷ் மற்றும் பவித்ராவும் வெளிவந்த போது அவர்களை செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா.

naresh babu

அதனை தொடர்ந்து போலீசார் நரேசை பத்திரமாக அழைத்துச் சென்றனர். அது மட்டுமல்லாமல்  நரேஷ் பாபுவை போலீஸ் அழைத்துச் செல்லும்போது செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து விசில் அடித்தபடியே சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Comment

Exit mobile version