“நானே வருவேன்” படம் குறித்து செம்ம மாஸாக பேசிய தயாரிப்பாளர் – விட்டா விக்ரம் படத்திற்கே சவால் கொடுக்கும் போல..

naanae-varuven-
naanae-varuven-

நடிகர் தனுஷ் சினிமா உலகில் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிப்பதால் அவரது திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கின்றன.

இருப்பினும் தனுஷ் தேர்ந்தெடுத்து நடித்த ஒரு சில திரைப்படங்கள்  தற்போது தோல்வியை தழுவியுள்ளது. அதனால் வெற்றியை கொடுக்க தற்போது தனது அண்ணன் செல்வராகவன் உடன் மீண்டும் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் பெயரில் கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய விருது விழா ஒன்றில் நானே ஒருவன் படம் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது இதற்கு முன் செல்வராகவன் இயக்கிய படங்களை விட நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய ஒரு இடத்திற்கு செல்வராகவனை அழைத்துச் செல்லும் படமாக இது இருக்கும் என கூறினார்.

இப்படமும் அகிலமெங்கும் அவரைப் பெரிய அதிர்வலையை உண்டாகும். தனுஷ் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதுவரை யாரும் செய்திராத கதாபாத்திரமாக இருக்கும் என பேசி உள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் நிச்சயம் நானே வருவேன் திரைப்படம் விக்ரம் படத்திற்கு பிறகு நல்லதொரு வரவேற்ப்பை பெரும் என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.