வெற்றி மாறனிடம் தஞ்சமடைந்த பேய் பட ஹீரோ.! வித்தியாசமான கதையில் உருவாகும் புதிய படம்.

தமிழ் சினிமா உலகில் நடன கலைஞராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின் சினிமா உலகில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெற்றிநடை கண்டு வருகிறார் ராகவா லாரன்ஸ்.

அண்மைகாலமாக ராகவா லாரன்ஸ் பேய் படங்களில் காமெடியை புகுத்தி சிறப்பான முறையில் படங்களை கொடுத்து ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக திரையரங்குகள் பக்கம் இழுத்துள்ளார். குறிப்பாக காஞ்சனா  சீரிஸ் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

இயக்குனர் எஸ் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தற்பொழுது உருத்திரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு லாகவா லாரன்ஸ் செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழை தாண்டி பல மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதால் பான் இந்தியத் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. செந்தில்குமார் இதற்கு முன்பாக எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கி உள்ளவர்.

தற்போது இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கணக்குப் போட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். வித்யாசமான திரைப்படங்களில் லாவா லாரன்ஸ் நடிக்க தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் அந்தப் படங்களைப் பார்க்க தற்போது ரெடியாக இருக்கின்றனர் நிச்சயம் இந்த படங்கள் வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment