சப்பாத்தியை வைத்து ராதிகாவிற்கு கட்டம் கட்டிய தாத்தா.! காண்டாகி பொங்கி எழுந்த ராதிகா… மண்டைய பிச்சிக்கும் கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் இதற்கு முந்தைய எபிசோடில் ராதிகாவிடம் சாப்பிடுவதற்கு மெனு கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறார் ராமமூர்த்தி. கோபியம் வாய் திறந்து கேட்டு விட்டார் என ராதிகாவிடம் கூத்தாடுகிறார். அதன் பிறகு இரவு நேரத்தில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள் ஆனால் ராமமூர்த்தி தாத்தா கண்ணை மூடி பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகா வந்தும் அவரைக் கூப்பிட்டும் காதில் விழாதபடி இருக்கிறார்.

உடனே கோபிஇடம் ராதிகா சென்று சொன்னதும் கோபி அவரை கூப்பிட சொல்கிறார் பின்பு சாப்பிட உட்கார்ந்த ராமமூர்த்தி இது என்ன சப்பாத்தி வேகவே இல்லை என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் குருமா நல்லாவே இல்லை எனவும் கூறுகிறார் உடனே கோபி இவர் வேண்டுமென்றே சொல்றாரு ராதிகா சாப்பாடு எல்லாமே பிரமாதமாக இருக்கு அல்டிமேட்டா இருக்கு என பாராட்டி  தள்ளுகிறார்.

உடனே ராமமூர்த்தி தாத்தா கோபியை பார்த்து என்னைக்காவது பாக்யாவை  இதுபோல்  பாராட்டியுள்ளயா  என கேட்க கோபி அமைதியாக இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் பாக்யா கிட்ட எத்தனை டைம் வாங்கி தின்னு இருப்ப என கூறுகிறார். பின்பு ராமமூர்த்தி ராதிகாவிடம் எப்படி சப்பாத்தி சுடுவது என கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சப்பாத்தி எல்லாம் சாப்பிட்டு எப்படித்தான் உயிரோட இருக்காங்களோ என கூறிவிட்டு பாக்யா சப்பாத்தி முன்னாடி இந்த சப்பாத்தி எல்லாம் நிக்க முடியுமா என வாய்க்கு வந்தபடி கூறுகிறார்.

பின்பு சாப்பிடாமல் எழுந்து செல்கிறார் இதனால் செம காண்டாகிறார் ராதிகா உடனே ராதிகா என்னால் இவங்க டார்ச்சர் தாங்கவே முடியல கோபி அவ்வளவுதான் சொல்லிட்டேன் எனக்கு கூறுகிறார் உடனே கோபி என்ன செய்ய முடியும் ராதிகா பெத்தவரு வெளியே போங்கன்னு சொல்ல முடியாது சீக்கிரமே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன் எனக் கூறுகிறார்.

மற்றொரு பக்கம் அமிர்தா ஊருக்கு செல்லும் எழில் இந்த ராத்திரியில் அமிர்தா வீட்டுக்கு போக வேண்டாம் பக்கத்திலேயே ரூம் எடுத்து தங்கி காலையில் செல்லலாம் என முடிவு செய்து சதீஷ் இடம் கூறுகிறான். அந்த நேரம் பார்த்து பாக்கியா போன் செய்து விடுகிறார் பாக்கியா அவரிடம் எங்கு இருக்க ஒரே பதட்டமா இருக்கு என கேட்க உடனே நான் அமிர்தாவை தேடி வந்துள்ளேன் என்பதை பாக்கியாவிடம் கூறிவிடுகிறார்.

பாக்யாவும் கொஞ்சம் பொறுமையா இருக்க மாட்டியா இவ்வளவு தூரம் பைக் ஓட்டிட்டு போனியா? என வருத்தமாக பேசுகிறார். உடனே பாக்யாவை சமாதானம் செய்கிறார் எழில், என்னால் அங்கு இருக்க முடியல அதனால தான் நான் அமிர்தாவை தேடிக்கிட்டு வந்து விட்டேன் என கூறுகிறான் பாக்கியாவும் பத்திரமாக இருந்து விட்டு வருமாறு கூறுகிறார். இதற்கு இடையில் வீட்டுக்கு வர ராமமூர்த்தி இடம் ஈஸ்வரி அமிர்தா வீட்டுக்கு சென்று இதெல்லாம் செட் ஆகாது என சொல்லிவிட்டு வந்ததாகவும் வர்ஷினி வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும் விஷயத்தை சொல்ல முதலில் அதிர்ச்சியாக ராமமூர்த்தி பின்பு சரி என சம்மதிக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யா உள்ளே வர அவளிடம் எதையும் சொல்ல வேண்டாம் என சைகை காட்டுகிறார் ஈஸ்வரி பாக்கியா வந்ததும் காபி கேட்டு சமாளிக்கிறார் ராமமூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment