விஜயகாந்தை வைத்து படம் எடுப்பதாக கூறி விட்டு கடைசியில் அஜித்துடன் கைகோர்த்த பிரபல இயக்குனர்.! படம் சூப்பர் ஹிட்.

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட எல்லாமே மாறிக் கொண்டே போகிறது முன்பெல்லாம் ஒரு புதுமுக இயக்குனர் அல்லது பழைய இயக்குனராக இருந்தாலும் சரி முதலில் தயாரிப்பு நிறுவனத்திடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டு பின் ஹீரோவை செலக்ட் செய்வார்கள். அதேசமயம் இதில் சில குளறுபடிகளும் நடக்கும் ஏனென்றால்  ஏனென்றால் ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் கிடைக்காமல் போய் விட்டால்.

வேறு வழியின்றி ஹீரோ, ஹீரோயின்களை மாற்றவேண்டிய சூழ்நிலைக்கு இயக்குனர்கள் தள்ளப்படுகின்றனர். அப்படி ஒரு சிறப்பான சம்பவத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். தமிழ் சினிமாவில் பல  கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் விக்ரமன். இவர் வானத்தைபோல, சூரியவம்சம் போன்ற பல சிறந்த படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  ராஜகுமாரன் இவர் நடிகை தேவயானியின் கணவர் ஆவார். வெகுநாட்களாக உதவி இயக்குனராக இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்டு ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஒரே சமயத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி ஓகே செய்யும் திறமை பெற்றிருந்தார்.

ராஜகுமாரன் அப்படி ஒரு தடவை  சூர்யா மூவிஸ் நிறுவனத்திடம்  விஜயகாந்த்தை நாயகனாக வைத்து ஒரு கதையைக் கூறி விட்டாராம் அதேநேரத்தில் ஆர்பி சவுத்ரி குட் பிலிம்ஸ் நிறுவனத்திடமும் நீ வருவாய் என கதையை சொல்லி அந்த படத்துக்கு அஜித், விஜயை வைத்து படத்தை எடுத்து விடலாம் என திட்டம் போட்டார்.

இப்படி இருக்க இயக்குனர் விக்ரமன் முதலில் ஆர்பி சவுத்ரி படத்தை எடுத்து விடுங்கள் எனக் கூற உடனடியாக விஜயகாந்த் படத்தை கண்டு கொள்ளாமல் நீ வருவாய் என படத்தை அஜித் மற்றும் பார்த்திபனை வைத்துபடத்தை எடுத்து விட்டாராம்.

Leave a Comment