ஆஹா தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இவரா.. மொத்த சினிமாவும் அதிர போகுதே…

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆன மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் தான் தனி ஒருவன் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தில நல்லா வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் அரவிந்த்சாமி அவர்களுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அதற்கு காரணம் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் அமைந்திருந்தது. ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நயன்தாரா என அனைவரும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அதிகாரப்பூர்வமாக மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் அறிவித்திருந்தார்கள் பல வருட காத்திருப்புக்கு பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் இந்த திரைப்படத்தில் இரண்டாவது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆனைவரிடமும் இருந்து வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் வில்லனாக நடிக்க முதலில் மாதவன் அவர்களிடமும் மலையாள நடிகர் பகத் பாஸில் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது இதன் நிலையில் இறுதியாக தற்பொழுது இந்த திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கமிட் ஆகியுள்ளார் ஜெயம் ரவிக்கு வில்லனாக தனி ஒருவன் 2 திரைப்படத்தில் பாலிவுட் உலகின் தாதாவாக இருக்கும் அபிஷேக்பச்சான் தேர்வாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகியது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் வில்லன் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தான் இருக்கும் அதனால் தான் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.