வைத்து புள்ள காரின்னு கூட பார்க்காமல் ராகினியை அசிங்கப்படுத்திய தமிழ் மற்றும் நடேசன் – தமிழும் சரஸ்வதியும்

Thamizhum Saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி நான் 40 லட்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணட்டுமா அண்ணனுக்கு என கேட்கிறார் அதற்கு அர்ஜுன் உன்னோட கம்பெனி உன்னோட சொத்து நீ ஏன் அதை என்கிட்ட கேக்குற தாரளமாக கொடு எனக் கூறுகிறார். உடனே அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் அந்த கம்பெனி அக்கவுண்ட் செக் புக்கை எடுத்துக் கொண்டு வாங்க என கூறுகிறார் அவரும் செக் புக் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

அதில் 40 லட்சம் ஃபீல் பண்ணி நீயே கொடுத்து விடு என அர்ஜுன் கூற ராகினியும் ஃபீல் பண்ணுகிறார். ராகினி தமிழிடம் கொடுக்க வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுனிடம் உனக்கு என்ன பைத்தியமா அவங்க பணம் இல்லாம அந்த கம்பெனி இழுத்து மூடனும்னு நாங்களே நினைச்சிட்டு இருக்கோம் நீ ஏன் பணம் கொடுக்க சொன்னேன் என அர்ஜுன் அம்மா, அக்கா கேட்க. இந்த செக்க அவங்க வாங்குனா தான என அர்ஜுன் பக்காவாக பிளான் போட்டு தமிழுக்கு போன் பண்ணி நாங்க போடுற பிச்சையில தான் நீங்க வாழ்ந்தாகணும் என்பது போல் கூறிவிடுகிறார்.

அடேய் உனக்கு உடம்பெல்லாம் மூளை.. சீதா, மீனாவை சரியான நேரத்தில் பகடைக்காயாய் பயன்படுத்தும் ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

இதனால் கடுப்பான தமிழ் கோவத்தில் இருக்கிறார் அந்த சமயத்தில் ராகினி தமிழ் வீட்டிற்கு போகிறார் அங்கு கோதை ராகினியை வரவேற்கிறார் ஆனால் நடேசன் வைத்துப்புள்ள காரினு கூட பார்க்காமல் இங்கே ஏன் வந்த என திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் கார்த்தியும் இங்கே எதுக்கு வந்த உன் புருஷனால தான் நாங்க இந்த நிலைமைக்கு இருக்கோம் இங்க ஏன் வந்த என்ன திட்டுகிறார். ஆனால் சரஸ்வதி ஏன் அவளை வாசலில் வைத்து திட்டுறீங்க புள்ளத்தாச்சி காரியை இப்படியா பண்றது என உள்ளே அழைத்து வருகிறார்.

அழைத்து வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நடேசன் ஆவேசப்பட்டு உன் புருஷனால தான் இந்த நிலைமைக்கு வந்தோம் என திட்டிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி ஏன் மாமா இப்படி திட்டறீங்க அவ மனசு கஷ்ட படாத என கேட்க. நாம் அந்த வீட்டை விட்டு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தோமே அப்ப இவ மனசுல கஷ்டப்படவில்லையே என கேள்வி கேட்கிறார். ராகினி நீங்க எல்லாம் கஷ்டப்படுறீங்கன்னு தான் நானே உதவ வந்தேன் என செக்கை எடுத்து வாங்கிக்கோங்க அம்மா என கோதை இடம் கொடுக்கிறார்.

ஆனால் கோதை செக்கு வாங்க மறுக்கிறார் அந்த சமயத்தில் தமிழ் வந்து உன் அக்கரைக்கு ரொம்ப நன்றி தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புறியா உன் செக் எடுத்துக்கிட்டு கிளம்பு என தமிழ் திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் உன் புருஷன் பிச்ச போடுவான் அதை நான் வாங்கி அவனுக்கு கும்பிடு போடணுமா. அதைவிட அசிங்க எனக்கு வேற எதுவும் கிடையாது, அவன் கிட்ட தான் நான் சவாலை விட்டு இருக்கேன் அவன் கிட்டயே பணம் வாங்கி அவனுக்கு கும்பிடு போட சொல்றியா என தமிழும் ராகிணியை திட்டுகிறார்.

ஐயா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு முன்பு நான் தான் நடிக்க வேண்டியது.! உண்மையை உடைத்த பிரபல நடிகை.

ராகினி அழுது கொண்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார் அடுத்த காட்சியில் தமிழ் ஒரு பைனான்சியாரிடம் பணம் வாங்க சென்றுள்ளார் அங்கு ஷூரட்டி ஏதாவது இருக்குமா என கேட்க என்கிட்ட கம்பெனி மட்டும் தான் இருக்கிறது ஆனால் நான் எல்லா பணத்தையும் கட்டி விடுவேன் என கூறுகிறார் உடனே அந்த பைனான்சியர் சரி தமிழ் நான் ஈவினிங் குள்ள பணத்தை ரெடி பண்ணிட்டு கால் பண்ணுகிறேன் என கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் அசோசியேசன் ஆபீஸிற்கு  தமிழ் செல்கிறார் அப்பொழுது அங்கு ஒருவருக்கு ஹார்ட் ஆபரேஷனுக்கு 40 லட்சம் தேவை என்பதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே பெரிய கம்பெனி முதலாளிகள் அனைவரும் தரவேண்டும் என சிறிய கம்பெனி முதலாளிகள் கூற வாக்குவாதம் ஆகிறது உடனே தமிழ் அதெல்லாம் எதுவும் தேவையில்லை எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நம்ப அசோசியேஷன் நம்பர் 300 பேர் இருக்கும் அதுல பாதி பேர் ஆவது 25 ஆயிரம் கொடுத்தால் போதும் ஆப்ரேஷன் சக்சஸ் ஃபுள்ள எல்லாம் முடிஞ்சிடும் எனக்கு கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நானே முதலா ஆளாக நின்று 25 ஆயிரம் தருகிறேன் என தமிழ் வாக்கு கொடுக்கிறார் அதற்காக பணம் இல்லாமல் சரஸ்வதி கம்மலை அடகு வைக்க வருகிறார் ஆனால் அதற்கு 25 ஆயிரம் கிடைக்காது என அடகு கடைக்காரர் கூறுகிறார் அனைத்துடன் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடு முடிகிறது.