அர்ஜுன் தலையில் இடிய இறக்கிய ராகினி.! அண்ணன் தங்கை பாசம் விட்டு போகாது மாப்பிள – தமிழும் சரஸ்வதியும்

Thamizhum saraswathiyum today episode october 13 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி மற்றும் அர்ஜுன் அக்கா கோவிலுக்கு வந்துள்ளார்கள் அதேபோல் கோதை, சரஸ்வதி ,வசு ,மூவரும் கோவிலுக்கு வருகிறார்கள் அப்பொழுது இரண்டு நபர்கள் இல்லாதவங்களுக்கு வாரி வாரி கொடுத்து நீங்க உங்க கழுத்துல எதுவுமே இல்லாம இருக்கீங்களே ரொம்ப கஷ்டமா இருக்கு என்பது போல் பேசுகிறார்கள் உங்க மருமக கழுத்துல கூட ஒண்ணுமே இல்ல மஞ்ச கயிறு தவிர என பேசுகிறார்கள்.

இதையெல்லாம் ராகினி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் கோதை அதற்கு, எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க முடியாது எங்க சிச்சுவேஷன் இப்ப இந்த நிலைமையில் இருக்கோம் சீக்கிரம் மாறிடும் நினைக்கிறோம் என பேசுகிறார். உடனே கோவிலுக்கு செல்கிறார் அப்பொழுது ராகினி எங்க அம்மாவிடம் பேச வேண்டும் என போய் பேசுகிறார் கோதை முதலில் நலம் விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி உங்கள பாக்க கஷ்டமா இருக்கு என பேசுகிறார்.

அதற்கு வசு இந்த நிலைமைக்கு காரணம் உன் புருஷன் தான்  எனக் கூற அதுக்கு அர்ஜுனின் அக்கா பார்த்தியா இதுக்கும் என் தம்பிதான காரணம் சொல்றாங்க   உடனே சரஸ்வதி நீ என்னடி பேசுற சொத்தை எல்லாத்தையும் புடுங்கிட்டு இப்ப நாடகம் ஆடுற என்ன திட்டி விடுகிறார்கள் உடனே கோதை இவங்கள் கிட்ட என்ன பேச்சு வாங்க நம்ம சாமி கும்பிடலாம். ராகினி உடம்ப பாத்துக்கோ என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் ஒரு கம்பெனிக்கு வருகிறார் அந்த கம்பெனி ஏற்கனவே இவர்களிடம் ரா மெட்டீரியல் கொடுத்துள்ளார்கள் ஆனால் புரொடக்ஷன் செய்யவில்லை என்றால் உங்களுடைய டில் கேன்சல் ஆகிவிடும் அதுக்கப்புறம் உங்க பேர் இன்ட்ரஸ்டியில் எல்லா கெட்டபேர் ஆயிடும் என மிரட்டுகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் தமிழ் வருகிறார் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நாளை ரா மெட்டீரியல் வாங்க வேண்டும் பணத்திற்கு என்ன பண்ண போறோம் என்று தெரியவில்லை என பேசிக் கொண்டிருக்கும் பொழுது உமாபதி சார் வருகிறார் அவர் ஒரு நபருக்கு ஹார்ட் ஆபரேஷனுக்கு பணம் கேட்டு வந்துள்ளார் ஆனால் அசோசியேஷனில் அவ்வளவு பணம் இல்லை நாம் நாளைக்கு பேசி முடிவு பண்ணலாம் என கூறுகிறார்கள்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் அவரின் மாமா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ராகினி வீட்டுக்கு வந்து அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க கைல காதுல எந்த நகையுமே இல்லை என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஆமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்பதான் எனக் அர்ஜுனின் அக்கா கூறுகிறார் அதற்கு ராகினி என்ன சொல்றீங்க என கேட்க இல்ல ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொல்ல வந்தேன் என பேசுகிறார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் சுதாரித்துக் கொண்டு ராகினியே உள்ளே அனுப்புகிறார் அடுத்த நாள் காலையில் ராகினி இடிந்து போய் உட்கார்ந்து இருக்கும் பொழுது அபி ஜூஸ் கொடுத்து குடிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அர்ஜுன் வந்து ஜூஸ் குடி ராகினி உடம்புக்கு நல்லது என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அம்மாவுக்கு தேவையான காசை கொடுத்து உதவலாமா என கேட்கிறார் அப்பொழுது அர்ஜுனின் மாமா இன்னைக்கு ரா மெட்டிரியல்ஸ் வாங்கவில்லை என்றால் கம்பெனி ரன் பண்ண முடியாது ஒர்க்கை ஸ்டார்ட் பண்ண முடியாது அப்புறம் கம்பெனி இழுத்து தான் மூடிட்டு போகணும் என பேசுகிறார்.

உடனே ராகினி நான் வேணா 40 லட்சத்துக்கு செக் எழுதி தரவா என அர்ஜுனிடம் கூற அர்ஜுன் அதிர்ச்சடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது