மொத்த சொத்தையும் மாத்தி எழுதி ராகினி கையெழுத்து போடுவதற்கு முன்பு தடுத்த நிறுத்திய தமிழ்.! உண்மையை நிரூபிப்பாரா..

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன், ராகினி, அர்ஜுனின் மாமா மூவரும் வந்து கோதை வீட்டில் அர்ஜுன் மீது பொருளை தள்ளி விட சொன்னது நீங்கள்தான் என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் பொருளை தள்ளிவிட்டவர் நமச்சிதான் காசு கொடுத்து பொருளை தள்ளி விட சொன்னார் என பொய் சொல்லி விடுகிறார் இதனால் ராகிணி திட்டிவிட்டு சொத்து முழுவதையும் அர்ஜுன் பெருக்கு மாற்ற தான் போகிறேன் உங்களால் என்ன முடியுமோ பார்த்துக் கொள்ளுங்கள் என பேசி விட்டு செல்கிறார்.

ஆனால் கோதை இது அம்புட்டும் நீங்களும் உங்க அப்பாவும் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதித்தது சொத்து போனாலும் பரவால்ல ஆனா அவன் கைக்கு போகக்கூடாது அவன் கைக்கு போனா இன்னும் நமக்கு தொல்லை கொடுப்பான் பணம் நிறைய வந்துச்சுன்னா அவன் நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டான் எப்படியாவது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோதை தமிழ் இடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதுக்கு எனக்கு கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் வந்து சொல்கிறேன் என நமச்சியை  அழைத்து கொண்டு செல்கிறார்.

அட நம்ம செல்லத்தையும் விட்டு வைக்காமல் ரூமுக்கு அழைத்த வாரிசு நடிகர்.? பட வாய்ப்பு வராததற்கு காரணம் இதுதானா..?

அடுத்த நாள் காலையில் கோதை சரஸ்வதி இருவரும் வாக்கிங் செல்லும் பொழுது அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா வழி மறைத்து மொத்த சொத்தையும் என் பேருக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எழுதி வாங்க தான் போறேன் என கூறுகிறார் ஆனால் சரஸ்வதி அது உன் கனவுல தான் நடக்கும் கண்டிப்பா ஆண்டவன் நல்லவங்கள கைவிடமாட்டான். உன்ன மாதிரி அயோக்கியன ரொம்ப நாள் வச்சிருக்க மாட்டான் எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ஆண்டவன் தான் சொத்து என் கைல கிடைக்கிறபடி செஞ்சிருக்காரு கண்டிப்பா நான் இன்னைக்கு ரெண்டு மணி நேரத்துல ரெஜிஸ்ட்ரேஷன் நடக்கும் அத நீங்க பாக்க தான் போறீங்க எழுதிட்டு வந்து உங்களை மீட் பண்றேன் என பேசிவிட்டு செல்கிறார். இவர்கள் பேசியதை கோதை தமிழிடம் கூறுகிறார் அவர் ரொம்ப தெனவட்டா பேசிட்டு போறேன் என சொல்ல அவன் எவ்வளவு வேணாலும் பேசட்டும் இன்னும் நேரம் இருக்கு அதுக்குள்ள ஏதாவது செஞ்சு ப்ரூப் பண்ணலாம் எனக் கூறுகிறார்.

வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமே இத்தனை கோடி வசூலா.! 16 வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு சம்பவமா.!

ராகினியே எழுதுறத தடுத்து நிறுத்துவா என தமிழ் கூறுகிறார். அதற்கு என்னிடம் பக்காவாக ஒரு பிளான் இருக்கு என சொல்ல மற்றொரு பக்கம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிஸில் ரிஜிஸ்டர் அனைத்து டாக்குமெட்டையும் படித்துவிட்டு அர்ஜுனை கையெழுத்து போட சொல்கிறார் அர்ஜுனின் மாமா மொத்த சொத்துக்கும் ஒரே அதிபதி நீதான் அண்ணாநகர் வீட்டை மட்டும் எனக்கு எழுதி தரியா எனக் கேட்கிறார்.

ராகினி அடுத்ததாக கையெழுத்து போடும் சமயத்தில் கோதை ராகினி நிறுத்து என தடுத்து நிறுத்துகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் தான் அனைத்து சித்து வேலையும் செய்தது என மேலிருந்து பொருளை தள்ளி விட்டார் வாயாலேயே கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.