நீ என்னைக்கும் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தான் அர்ஜுனை சீண்டிய தமிழ்..! இருந்த ஆர்டர் கேன்சல் ஆனதால் ராகினிடம் வெறுப்பை காட்டும் மாப்பிள்ளை..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமா காரில் சென்று கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுனின் மாமா பரமு நீ அடிச்சது இன்னும் வலிக்குது பேசவே முடியல என பேசிக் கொண்டிருக்கும் பொழுது நான் உங்கள் அடிக்கலைனா இந்நேரம் நம்ம எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போயிருக்கணும் நல்லவேளை அந்த சிவமூர்த்தி நம்மள போட்டு குடுக்கல என பேசிக் கொண்டிருக்கிறார்.

அது எப்படி என பரமு கேட்க, இந்தக் கோதையும் தமிழும் நிறைய பேருக்கு நல்லது செஞ்சிருக்காங்க அது தான் கரெக்டாயத்துக்கு வந்து அவங்கள காப்பாற்றுவது என பேசுகிறார். அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமா சென்று கொண்டிருக்கும் பொழுது நமச்சி அவர்களை  பார்த்து விடுகிறார் உடனே வழிமறித்து அர்ஜுனிடம் பேசுகிறார் தமிழ் அப்பொழுது இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னால சொத்தை மாற்றி எழுத முடியாது அதற்கு நான் விடவும் மாட்டேன் என பேசுகிறார்.

ரஜினி நிராகரித்த கதை.. 100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிம்பு.!

நீ சம்பளம் வாங்குற வேலைக்காரன் தான் முதல்ல எங்க அம்மா கிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்தா இப்ப என் தங்கச்சி கையால சம்பளம் வாங்குற நீ ஒரு வேலைக்காரன் தான் என மோசமாக கிண்டல் அடிக்கிறார். பத்தாத குறைக்கு நமச்சியும் தனது பங்கிற்கு துணியும் சாப்பாடு போட்டா இவுங்க வேலை செய்வாங்க என வீட்டில் உள்ளவர்களையும் கிண்டல் அடிக்கிறார் அதற்கு அர்ஜுன் ஜெய்கிறோம் என்ற  மெதப்புல பேசாதீங்க கண்டிப்பா நான் சொத்தை எழுதி வாங்குவேன் ஒரு நாள் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மேகனாவிடம் அந்த யூனிட் பத்தி பேசிவிட்டு வரவேண்டும் என கூறுகிறார். அந்த சமையத்தில் ஆர்டர் கொடுத்த அந்த சி இ ஓ நம்மள பாக்கணும்னு சொல்லி இருக்காரு என நமச்சி கூற தமிழ் பதட்டத்துடன் கேட்கிறார் பிறகு இருவரும் கிளம்பி ஆர்டர் கொடுத்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அங்கு அந்த கம்பெனியின் சிஇஓ லட்சுமி இண்டஸ்ட்ரிஸ்க்கு கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்ய போகிறேன் அந்த ஆர்டரையும் நீங்கள் தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் இதனால் தமிழ் முதலில் மறுக்க பிறகு நீங்க செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வேற யார்கிட்டயாவது கொடுக்கப் போகிறேன் என்ன திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

ஏன் என்று கேட்க அவர்கள் குவாலிட்டி சரியில்லை குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்யவில்லை என கூறுகிறார் இதனால் நமச்சி யாருக்கோ கொடுக்கிறதுக்கு நாமலே எடுத்து செய்யலாமே வர்ற லட்சுமியை  ஏன் வேண்டாம்னு சொல்ற என தமிழிடம் கூற பிறகு தமிழும் சம்மதிக்கிறார்.

Baakiyalakshmi Promo : உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள விட்டு விலகி தானே இருந்தீங்க.. நான் மட்டும் உங்க பையன் கூட சேர்ந்து வாழனுமா.. பாக்கியாவை கேள்வி கேட்ட ஜெனி

அடுத்த காட்சியில் அர்ஜுன் டெலிவரி செய்ய வேண்டியவர்கள் போன் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள் ஏன் என்னும் முடிக்கவில்லை என செல்வத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு செல்வம் மூன்றாவது யுனிட்டில் சரியாக வேலை நடக்கவில்லை அனைவரும் ஸ்லோவாக வேலை செய்கிறார்கள் எக்ஸ்பீரியன்ஸ் அனைவரும் கிளம்பி விட்டார்கள் தமிழ் கம்பெனிக்கு அதனால்தான் இப்படி நடக்கிறது என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மெயில் வருகிறது.

மெயிலை பார்த்த அர்ஜுன் கடுப்பாகிறார் ஏனென்றால் ஆர்டர் கொடுத்த கம்பெனி கேன்சல் செய்து விட்டார்கள் இதனால் கோபத்தில் இருக்கும் அர்ஜுன் பைலை தூக்கி தள்ளுகிறார் அந்த சமயத்தில் ராகினி வருகிறார் என்ன ஆச்சு என கேட்க ஆர்டரை கேன்சல் செய்து விட்டார்கள் எனக் கூறுகிறார்.

இதற்கெல்லாம் காரணம் தமிழ் என்பது போல் அர்ஜுனன் மாமா கூற அப்படியெல்லாம் இருக்காது என ராகினி கூறுகிறார் ஆனாலும் அர்ஜுனும் தமிழ் தான் இதுக்கு எல்லாம் காரணம் 18000 பீஸ் மட்டுமே முடிக்க வேண்டிய இடத்தில் 15000 மட்டும் முடிச்சிருந்தாங்க அவங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருக்காங்க நம்ம ஆர்டர் கேன்சல் பண்ணி இருக்காங்க இதுக்கெல்லாம் காரணம் என்ன என பேசுகிறார்.

Baakiyalakshmi Promo : உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள விட்டு விலகி தானே இருந்தீங்க.. நான் மட்டும் உங்க பையன் கூட சேர்ந்து வாழனுமா.. பாக்கியாவை கேள்வி கேட்ட ஜெனி

ஆனால் ராகினி குவாலிட்டி சரியில்லாமல் இருந்திருக்கலாம் என பேச அதற்கு அர்ஜுன் நம்ம செய்ற குவாலிட்டி சரியில்லன்னு சொல்றியா என ராகினியிடம் எதிர்த்து பேசுகிறார். ஒரு வழியாக மீண்டும் தமிழ் மீது பழியை சுமத்த ஆரம்பித்து விட்டார் அர்ஜுன்  இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது