அர்ஜுன் குடும்பம் போட்ட திட்டத்தை சுக்குநூறாக உடைத்த கோதை.! நடேசனை தொடர்ந்து சரஸ்வதி வீட்டிற்கு சென்ற கார்த்தி.!

தமிழும் சரஸ்வதியும் இன்றைய  எபிசோடில் வசூவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கார்த்தி வீட்டிலேயே வைப்பதற்கு அனைவரும் முடிவு செய்து இன்விடேஷன் அடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்விடேஷனில் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயர் போட்டு இருந்ததால் அனைவரும் கோபப்படுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் என்னை கேட்காமல் எதற்கு பெயர் போட்டாய் என கோதையும் கேட்கிறார்.

அதேபோல் ராகினி அவர்கள் வீட்டிற்கு வந்தால் நான் வீட்டை விட்டு வெளியே போய் விடுவேன் என மிரட்டுகிறார் ஒருவழியாக அனைவரையும் சமாளித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிறகு இங்கே தமிழ் வரது தானே பிரச்சனை எங்க வீட்டில் பங்ஷனை வைத்துக் கொள்ளலாம் என சந்திர கல கூறி விடுகிறார். அதனால் பலரும் நிம்மதி அடைய ஆனால் ராகினி மட்டும் தமிழ் வந்தால் நான் வரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார்.

மேலும் சந்திரகலா போன பிறகு நடேசன் கோதையிடம் பேசுகிறார் பெயர் வைக்கும் விழாவிற்கு தமிழையும் சரஸ்வதியும் கூப்பிடனும் வசு நினைக்கிறா அது நியாயம் தான் ஏன்னா அவ உயிர காப்பாத்துனது சரஸ்வதி தான் அதனால அவங்களை இன்வைட் பண்றது தான் சரி என கோதையிடம் கூற இதுல நீ தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும்  கூறுகிறார். கோதையும் கார்த்தியிடம் அவங்க ரெண்டு பேத்தையும் நேரில் பார்த்து இன்விடேஷன் வைத்துவிட்டு வா என கூறி விடுகிறார் இதனால் கார்த்தி கோபப்படுகிறார் அதான் ஹெல்ப் பண்ணதுக்கு நன்றி சொல்லிட்டோம் இப்ப எதுக்கு அவங்கள கூப்பிடனும் என்பது போல் கூற.

ஆனால் கோதை, அம்மா சொன்னா கேப்ப தானே ஒழுங்கா போய் இன்விடேஷன் கொடுத்துட்டு கூப்பிடுவாங்க போய் எதுவும் பேசாத, ஏதும் கத்தாத,   கோபப்படாத என கூறிவிட்டு அனுப்புகிறார். கார்த்தியும்  சரஸ்வதி வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது சரஸ்வதி ரொம்பவும் சந்தோஷப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் கார்த்தி இன்விடேஷன்  அம்மா கொடுக்க சொன்னதாக கூற சரஸ்வதி சந்தோஷப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் சரஸ்வதிக்கு கையும் ஓடாமல், காலும் ஓடாமல் சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கார்த்தி இன்விடேஷன் கொடுக்கிறார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வாங்குகிறார்கள். சரஸ்வதி சாப்பிட்டு போகலாம் என கூற தமிழும் சாப்பிட்டு போவது தான் மரியாதை என கூறுகிறார்.

பிறகு கார்த்தி சாப்பிடுகிறார் ரொம்ப நாள் கழித்து நல்லா சாப்பாடு சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார். பிறகு வீட்டிற்கு போன கார்த்தி இடம் ஏன் இவ்வளவு லேட் என நடேசன் கேட்கிறார். இல்ல சின்ன வேலை இருந்தது வெளியில அதை முடிச்சுட்டு வரேன் என கூற உடனே ராகினி நீயும் மாறிட்டியா என கார்த்தி இடம் கேட்கிறார். நான் போய் செஸ்ட் ஃபார்மல் டிஸ் போன இன்விடேஷன் வச்சேன் வந்தேன் என கூறுகிறார். ஆனால் ராகினி அவங்க வர்ற மாதிரி இருந்தா நான் ஃபங்ஷனுக்கே வரமாட்டேன் என மீண்டும் கூற அதற்கு கோதை இது வசுவோட குழந்தையோட பங்க்ஷன் அவங்க வீட்ல வைக்க போறாங்க அவங்க யார கூப்பிடனுமோ அவங்க கூப்பிட்டு இருப்பாங்க இதுல உனக்கு என்ன ராகினி எனக் கூறுகிறார்.

அர்ஜுன் குடும்பமும் ராகினிக்கு மரியாதையே கிடையாது அப்புறம் எதுக்கு நாங்க மட்டும் போகணும் என ஏற்றி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் பருப்பு எதுவும் வேகாமல் கோதை ஒரேடியாக வசுவோட குழந்தைக்கு பெரியம்மா பெரியப்பா அவங்க தான்   அவ உயிரை காப்பாத்துனதும்   அவங்க தான் அவங்க வரணும்னு வசு ஆசபடுரா அதுல என்ன உனக்கு பிரச்சனை இங்க தான் வரக்கூடாதுன்னு சொன்ன இப்ப அவங்க வீட்ல தானே பங்க்ஷன் எனக்கோதை பேச உடனே அர்ஜுன் விடு நீ சொன்னாலும் கேட்க மாட்டாங்க என்பது போல் ஏற்றிவிட்டு அழைத்து செல்கிறார்.

அர்ஜுன் குடும்பம் எவ்வளவு முயற்சி செய்தும் தமிழ் மற்றும் சரஸ்வதி வருவதை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version