கோதையிடம் சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்பிள்ளைக்கு இப்ப நேரம் சரி இல்லையாட்டுக்கு..! சந்திரகலாவின் திட்டம் நிறைவேறுமா.?

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசூ சரஸ்வதிக்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது அத்தை திட்டவில்லை அதாவது நடேசனை கோதை திட்டவில்லை என்பதையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் நடேசனை திட்டி கொண்டு இருந்தார்கள் ஆனால் கோதை அவரை ஒரு வார்த்தை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என கூறிவிட்டாராம் அதனை வசு சரஸ்வதி இடம் சொல்ல சரஸ்வதி மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வயதில் இவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் லவ்வோட இருக்காங்க எனவும் புகழ்ந்து பேசுகிறார்கள்.

பிறகு வசு போனை கட் செய்த பிறகு சரஸ்வதி தமிழிடம் நடந்த  அனைத்தையும் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் நாமளும் இது போல இருக்க வேண்டும் என கூற தமிழுக்கு கோவம் வருகிறது நான் அப்போ உன் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேனா எப்ப பாரு என கேள்வி எழுப்புகிறார் அதெல்லாம் இல்ல வயதான பிறகும் நம் இதே போல் இருக்க வேண்டும் என கூறுகிறார் கொஞ்சம் சண்டை நிறைய லவ் பண்ண வேண்டும் எனவும் கூறுகிறார்.

பிறகு தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள் அதிகாலையில் சரஸ்வதி கனவு காணுகிறார் வசுவின் குழந்தை தமிழையும் சரஸ்வதியையும் கூப்பிடுவது போல் கனவு காணுகிறார் உடனே சரஸ்வதி தமிழிடம் கனவு கண்டதை கூற அந்த சமயத்தில் வசு கால் செய்கிறார். குழந்தையை பார்க்கிறீர்களா வீடியோ கால் பண்ணவா என கேட்க வேண்டாம் குழந்தை நல்லா இருந்தால் போதும் என கூறுகிறார் சரஸ்வதி இதனால் வசு கஷ்டப்படுகிறார்.

அடுத்த காட்சியில் சந்திரகலா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது வசு கால் செய்ததையும் குழந்தையை பார்க்க முடியவில்லை என தமிழ் மற்றும் சரஸ்வதி கஷ்டப்படுகிறார்கள் எனவும் கூறுகிறார். அதற்கு தான் நான் ஒரு பிளான் வைத்துள்ளேன். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை உடனே ரெடி செய்ய வேண்டும். என கூறுகிறார்கள் இதனை கோதையிடம் சந்திரகலா கூறுகிறார் பங்ஷனை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

பிறகு சந்திரகலா கிளம்புகிறார், வெளியே வந்த வசு என்னம்மா தமிழையும் சரஸ்வதியும் கூப்பிடுறேன் சொன்னீங்க இப்ப சொல்லவே இல்லையே என கேட்க இப்ப சொன்னா கோபப்படுவாங்க வேணாம்னு சொல்லுவாங்க அதுக்கு ஒரு பிளான் இருக்கு நான் சொல்லிக்கிறேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சரஸ்வதி பெயரை இன்விடேஷனில் போடலாம் எனவும் பேசி கொள்கிறார்கள்.

அடுத்த காட்சியில் சரஸ்வதி மெக்கானிக் ஷெட்டை வாங்குவது பற்றி பேசலாம் என தமிழிடம் பேசப் போகிறார் அந்த சமயத்தில் வசு கால் செய்கிறார் அர்ஜுன் கம்பெனிக்கு போகப் போகிறான் அவரிடம் சபதம் போட்டதை நிறைவேற்றவில்லை என்பதை தமிழியிடம் வசு கூறுகிறார் உடனே தமிழ் பைக்கில் சென்று  அர்ஜுன் காரை மரைக்கிறார். என்ன சபதம் போட்டது மறந்து விட்டதா அப்படியே ஓடிடு இல்லானா நாலு போடு போட்டு விடுவேன் என்று தமிழ் அர்ஜுனனை பார்த்து கூற இன்னைக்கு கண்டிப்பா நான் கம்பெனிக்கு போவேன் என அர்ஜுன் பேசுகிறார்.

உடனே கார்த்தி நடேசன் கோதை மூவரும் வேறு ஒரு காரில் வருகிறார்கள் அப்பொழுது இங்கு என்ன பிரச்சனை எதற்காக வழி மறிக்கிறீர்கள் என கார்த்திக் தமிழை பார்த்து கேட்கிறார் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது இவன் கம்பெனி உள்ள போக கூடாது என கூற அதற்கு கோதை எங்க டைரக்டர் கம்பெனிக்குள்ள போக கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு எதுக்காக பிரச்சனை பண்ணுகிறீர்கள் என கேட்க உடனே நடேசன் தமிழ் இடம் என்ன என விசாரிக்கிறார் அதற்கு நமச்சி உண்மையை சொல்லப் போகிறார் இதனால் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் அர்ஜுன். இந்த உண்மை தெரிந்த உடன் கோதை அர்ஜுன் மீது பாய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் இத்துடன் எபிசோட் முடிகிறது.

Leave a Comment