ஆயிரம் தான் இருந்தாலும் சரஸ்வதி என்னுடைய மருமகள்.! அர்ஜூனின் பிளானை சுக்குநூறாக உடைத்த கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றய எபிசோடில் கோதை, நடேசன், வசு மூவரும் சரஸ்வதி மெக்கானிக் ஷாப் திறப்பு விழாவிற்கு சென்று உள்ளார்கள், ஆனால் இது எதர்ச்சியாக நடந்தது போல் அனைவரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில் அர்ஜுன் ராகினியை ஏற்றிவிட்டு சரஸ்வதி மெக்கானிக் ஷெட்ற்க்கு போனதை கூறுகிறார் உடனே நீங்க எப்படி அம்மா அங்க போனீங்க கேள்வி கேட்கிறார் ராகினி அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் குடும்பம் ஏற்றி விடுகிறது.

இதனால் டென்ஷனான கோதை கார் பஞ்சர் ஆட்சி அதனால எதர்ச்சியாக தான் போகணும் பங்க்ஷன் நடந்துட்டு இருந்தது அதனால முடிச்சிட்டு வந்தோம் இதனால என்ன, எல்லாம் அவங்க அவங்க வேலைய பாருங்க எனக்கூறி விடுகிறார். அந்த சமயத்தில் கோதை கம்பெனியில் வேலை செய்த தொழிலாளி சண்முகம் இந்த சமயத்தில் பொண்ணுக்கு வளைகாப்பு என்று கூறி பத்திரிக்கை வைக்க வந்துள்ளார்.

ஆனால் வந்த தொழிலாளியை மரியாதை குறைவாக கார்த்தி மற்றும் அர்ஜுன் பேச உடனே நடேசன் கோபப்பட்டு வயசுக்கு மரியாதை கொடு அப்படின்னு  திட்டி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் வந்த தொழிலாளியும் கோதையிடம் என் மேல கோபம் இல்லைல்ல என்று கேட்க அதெல்லாம் எதுவும் இல்ல வருத்தம் தான் கொஞ்சம் எனக் கூற உடனே சண்முகம் குடும்பத்தோட எல்லாரும் என்னோட பொண்ணு வளைகாப்புக்கு வந்து விட வேண்டும் என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில் சரஸ்வதியிடம் நகை எடுக்க போக வேண்டும் என்று தமிழ் கூற உடனே சரஸ்வதி தனக்கு தான் நகை என நினைத்துக் கொண்டு பேசுகிறாள் ஆனால் தமிழ் சண்முகம் அண்ண பொண்ணுக்கு வளைகாப்பு அதனால் நகை எடுக்க போக வேண்டும் எனக் கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க நான் நாளைக்கு ஃபங்ஷனுக்கு வரவில்லை நீங்க போயிட்டு வாங்க என்று சரஸ்வதி கூற ஆனால் தமிழ் எதற்காக இப்படி சொல்ற கண்டிப்பா நீ வந்து தான் ஆகணும்.

பிறகு எனக்கு இன்னும் குழந்தை பிறக்கல அதனால யாராவது ஏதாவது பேசிடுவாங்க கஷ்டமா இருக்கு அதனால் வரவில்லை என்று சரஸ்வதி தமிழிடம் பேசுகிறார். அடுத்த நாள் பங்ஷனுக்கு கோதை குடும்பம் செல்கிறது அது மட்டும் இல்லாமல் தமிழும் செல்கிறார் இதுதான் சான்ஸ் அர்ஜுன் மாப்பிள்ளை  வீட்டாரிடம் குழந்தை பிறக்காதவர்கள் நலுங்கு வைத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா ஏற்றி விடுகிறார்.

இதனைப் புரிந்து கொண்ட மாப்பிள்ளை வீட்டார் சரஸ்வதி நலங்கு வைக்கும் நேரத்தில் நிறுத்துமா உனக்கு இன்னும் குழந்தை பிறக்கல எங்க குடும்பத்து வாரிசுக்கு ஏதாவது ஆகிட போகுது. இதனால் சரஸ்வதி வருத்தப்படுகிறார் இந்த சமயத்தில் கோதை சரஸ்வதிக்கு சப்போர்ட் செய்து சரஸ்வதி நலுங்கு வைக்கவில்லை என்றால் நானும் வைக்க மாட்டேன் கிளம்புகிறேன் என்று கோதை பேசுகிறார்.

இதனால் சரஸ்வதி கண்ணீரில் மிதக்கிறார் என்னதான் இருந்தாலும் தன்னுடைய மருமகள் என்ற எண்ணம் கோதைக்கு வந்திருக்கிறது அதனால் தான் கோதை சரஸ்வதிக்கு சப்போர்ட் செய்கிறார் அடுத்த காட்சியில் சரஸ்வதி கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு தமிழ் மற்றும் சரஸ்வதி இன்னும் நமக்கு குழந்தை பிறக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோதை மற்றும் நடேசன் கோவிலுக்கு வருகிறார்கள் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விடுகிறார்கள் அப்பொழுது கோதை வருத்தத்துடன் சரஸ்வதியை பார்த்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment