தமிழுக்கு பாடை கட்ட அர்ஜுன் போட்ட பிளான்.. மேக்னாவை சிக்க வைக்க வீடியோ எடுத்த நயவஞ்சகன்..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் ஆயுதங்களை தமிழ் கம்பெனியில் பதுக்கி வைக்க ஆர்டர் போடுகிறார் மேக்னா ஆனால் அங்கு அந்த பொருள் இல்லை வந்தவர்கள் செக் பண்ணி பார்த்துவிட்டு வெளியே செல்கிறார்கள் பிறகு இதையெல்லாம் செய்ய சொன்னது மேகநாதன் என சரஸ்வதி சொல்ல உடனே அந்த டிபார்ட்மெண்ட் மேகனா வீட்டிற்கு வருகிறார்கள்.

அதற்குள் பிசினஸ் பேச 3 நபர்கள் வந்துள்ளார்கள் அப்பொழுது அதிகாரிகள் வீட்டிற்கு வருகிறார்கள் அந்த சமயத்தில் நீங்கள் தான் இந்த மாதிரி ராங் இன்பர்மேஷன் கொடுத்ததா நம்பரை டிரேஸ் பண்ணும் பொழுது இதன் அருகில் உள்ள டவர் தான் காட்டுகிறது என மேகனாவை திட்டி விட்டு செல்கிறார்கள் உடனே கலிவரதன் இண்டஸ்ட்ரியல் உனக்கு எவ்வளவு பெரிய மதிப்பு இருந்தது பிசினஸ் எல்லாம் நம்பர் ஒன்னா இருந்தா ஆனா இப்ப எவ்ளோ பெரிய அசிங்கமா ஆயிடுச்சு என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் நமச்சி பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறார் நான் இனிமேல் எதற்கு உயிரோடு இருக்கணும் குடிச்சு குடிச்சு சாகுறேன் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அபி வருகிறார் உனக்கு நான் இருக்கேன் நீ செஞ்ச தப்பு பெரிய தப்பு அதனாலதான் இப்படி உனக்கு தண்டனை எல்லாமே சரியாகிவிடும் உனக்காக நான் இருக்கேன் குத்துக்கல் மாதிரி என அழைத்துச் செல்கிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் மெட்டீரியல் வைக்க சொன்ன நபர்களை அழைத்து பேசுகிறார் அந்த மெட்டீரியல் வச்சிங்களா இல்லையா அந்த மேகனா என்ன திட்றா என பேசும் பொழுது அதை வைத்துவிட்டு கடைசி நேரத்தில் எப்படி அங்கிருந்து மிஸ் ஆச்சுன்னு தெரியல என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இனிமே வேலை கிடையாது ஒன்னும் கிடையாது என திட்டு விட்டு செல்கிறார்கள்.

மேலும் சரஸ்வதி மெட்டீரியலை வைக்க சொன்ன அர்ஜூன் இதற்கு முன்பு அவருக்கு வேலையை பார்த்த மூன்று தொழிலாளிகள் தெரிந்து போய் மெட்டீரியலை இங்கேதான் வைத்துள்ளார்கள் என அந்த மெட்டீரியலை எடுத்து ஒளித்து வைத்துள்ளார்கள் அதனை கூறி நாங்கள் செய்தது தவறுதான் ஆனால் இந்த முறை நாங்கள் செய்யவில்லை அதனை கைப்பாற்றி விட்டோம் என பேச எங்களை கம்பெனியில் சேர்த்துக்கோங்க நாங்க இங்கேயே இருக்கோம் என தவறை உணர்ந்து கூறுகிறார்கள் பிறகு அவர்களை இங்கேயே சேர்த்துக் கொள்கிறார்கள்.

அவமானப்பட்டு நிற்கும் மேகனா அவர்களிடம் அர்ஜுன் கலிவரதன் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது உன்னை இவ்வளவு அசிங்கப்படுத்துவான் என்று நினைக்க கூட இல்ல இதுக்கு மேல அவனை விடவே கூடாது என ஆளாளுக்கு மேகனாவை ஏற்றி விடுகிறார்கள் உடனே அர்ஜுன் அதற்கு என்னிடம் ஐடியா இருக்கிறது நீங்க ஓகே சொன்னால் போதும் என கூறுகிறார் ஆள் வைத்து தமிழ் கை காலை உடைத்து விட வேண்டும்அப்படி செய்துவிட்டால் சரஸ்வதியும் அழுவாள் தமிழும் எழுந்து நடக்க மாட்டான்.

அதுக்கப்புறம் நாம நினைச்சதை சாதிச்சிடலாம் என பேச கலிவர்தனம் இதுதான் சரி என கூறுகிறார் ஆனால் அதற்கு முன்பே போனில் வீடியோ எடுக்க சொல்கிறார் கலிவரதன் அவர் மகன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் இது தெரியாமல் மேகனா ஆமாம் உடனே செய்து விடுங்கள் என்ன நடந்தாலும் பரவாயில்லை தமிழை நம்ம பழி வாங்கணும் என கூறுகிறார் இதனை மகன் வீடியோ எடுக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version