ராகினியை ஏமாற்றி மொத்த சொத்தையும் எழுதி வாங்கும் அர்ஜுன்.! இனிமேதான் இருக்கு பஞ்சாயத்தே… தமிழும் சரஸ்வதியும்..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி சந்தோசமாக தமிழ் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது கோதை, வசு, சரஸ்வதி, கார்த்தி என அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ராகினியை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் ராகினிக்கு என்ன வேண்டும்? என்ன கொடுக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்கிறார்கள். மற்றொரு பக்கம் அர்ஜுன் குழம்பிக் கொண்டிருக்கிறார் இவள் மறுபடியும் அங்கே போனால் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ராகினி இப்படியே சந்தோஷமா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் என பேசிக்கொண்டு இருக்கிறார். அதற்கு நமச்சி உடனே அதற்கு சொத்த அம்மா பேருக்கு மறுபடி எழுதிக் கொடுக்க முடியுமா என கேட்க ராகினி என்னென்ன பேசுறீங்க என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் குடும்பம் ஏமாந்ததால் தான் அந்த சொத்தை அவங்களுக்கு எழுதி கொடுத்தோம் அத போய் இப்ப எழுதி வாங்குனா என்னன்னு கேக்குறீங்க என பேசுகிறார்.

முதல்முறையாக ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றும் கௌதம்.. ஆட்டத்தை ஆரம்பித்த சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அந்த சமயத்தில் அர்ஜுன் போன் பண்ணுகிறார் ராகினி அர்ஜுனிடம் பேசுகிறார் அப்பொழுது நான் பழையபடி சந்தோஷமா இருக்கேன் இப்பதான் எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு மறுபடியும் எல்லாரும் ஒண்ணா இருந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும் என அர்ஜுனிடம் சொல்ல அர்ஜுன் திகைத்து போய் நிற்கிறார். இவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என பிளான் பண்ணி அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் ஏதேதோ சொல்லி ராகினியை கூட்டிக்கொண்டு வாருங்கள் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ராகினியை அனைவரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் ராகினி சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது அர்ஜுனின் மாமா வந்து வாமா கிளம்பலாம் என கூப்பிடுகிறார் இப்பதான் வந்தோம் சாப்பிட்டு வருகிறோம் என பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அர்ஜுனன் மாமா விடுவது போல் தெரிவதில்லை ராகினிக்கு பொரை ஏறினதும் உடனே அர்ஜுனனின் மாமா என்னத்த கொடுத்தார்களோ குழந்தைக்கு ஏதாவது ஆயிட போகுது வாமா என பேசுகிறார்.

ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கிழித்து தொங்க விட்ட அர்சன்னா, விசித்ரா.! குரூப் டிஸ்கஷன் தெரியுது பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி

இப்படியே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருக்கிறது அந்த சமயத்தில் என்ன எங்கள ஏமாத்தி சொத்தை எழுதி வாங்குனவன் தான நீனு ஒழுங்கா ஓடிடு அடி வாங்கி செத்துறாத என பேசுகிறார் அதேபோல் கார்த்தியும் சட்டையை பிடித்து தூக்குகிறார் உடனே அர்ஜுனின் மாமா இவங்களுக்கு எல்லாத்துக்கும் சொத்து தான் முக்கியம் நீ முக்கியம் கிடையாது உன்னைய பகடைக்காய வச்சு தான் இவங்க சொத்த திரும்பி வாங்க தான்  பார்க்கிறாங்க என பேசுகிறார்.

இதனால் ராகினி  டென்ஷன் ஆகி சொத்துதான் முக்கியமா எனக் கேட்க ஆரம்பிக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கார்த்தி ரொம்ப நாள் ஏமாத்தி எழுதி வாங்குன சொத்த வெச்சி இருக்க முடியாது அதுக்காக தான் அப்பா வைக்கில பார்க்க போயிருக்காரு என கூறி விடுகிறார் இதனால் ராகினி அப்பா எங்கே பிரண்ட பாக்க போயிருக்காருன்னு சொன்னீங்க கார்த்தி அண்ணா என்னான்னா இப்படி சொல்றாங்க என கேட்க. அப்போ உங்களுக்கு சொத்து தான் முக்கியமா என்ன பேசுகிறார் ராகினியும்.

உடனே ராகினி கோபப்பட்டு வீட்டிற்கு வெளியே வருகிறார் அர்ஜுன் வீட்டிற்கு வந்து நடந்த அனைத்தையும் அர்ஜுனனின் மாமா அர்ஜுனிடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி கோபமாக கிளம்புகிறார் அப்பொழுது ஏதோ ஒரு ராகினியிடம் பேச வேண்டும் என்று சொன்னியே என கேட்க அம்பத்தூரில் இருக்கும் ஒரு யூனிட்டை விற்றுவிட்டு புதிய கம்பெனியை விலைக்கு வாங்கலாம் என போனேன் ஆனால் சொத்து ஃபுல்லா உன் பேர்ல இருக்கு நீங்க ஒன் ஆஃப் தி டைரக்டர் தான் எனக்கூறி விடுகிறார்கள் அதனால் ராகினியிடம் அர்ஜுன் குடும்பம் சொத்த பேசாம அர்ஜுன் பெயருக்கு எழுதி கொடுத்திடலாம் என பேசுகிறார்கள்.

ராகினியும் அது மாதிரியே செஞ்சுடலாம் சொத்த உங்க பேருக்கு எழுதி கொடுத்திடலாம் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.