ஹாஸ்பிடலில் டாக்டர் இல்லாததால் பேஷண்டுக்கு ட்ரீட்மென்ட் செய்யும் ராகினி!! அதனால் ஏற்பட்ட விளைவு.. ராகினியை எதிர்க்கும் அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி மற்றும் அர்ஜுன் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ராகினி தமிழ் அண்ணன் சர்ப்ரைஸாக அனைவருக்கும் பதவி கொடுத்தது நல்லா இருக்கு அவர் எங்க கார்த்தி அண்ணன விட்டுக்கொடுத்துருவாரோன்னு எல்லாரும் பயந்தோம் ஆனால் அப்படி இல்லாம அவருக்கும் ஜேஎம்டி பதவி கொடுத்தது அவருடைய பெருந்தன்மையை காட்டுது என தமிழை புகழ்ந்து பேசுகிறார். பதவி கொடுக்காமல் போயிருந்தா குடும்பம் பிரிஞ்சு போயிருக்கும் நல்லா வேல தமிழ் அண்ணன் கார்த்தி அண்ணனை விட்டுக் கொடுக்கல எனக் கூறுகிறார். அதனால் அர்ஜுன் கடுப்பாகிறார்.

 அந்த சமயத்தில் உடனே அர்ஜுனுக்கு ஒரு போன் வருகிறது. அப்போது அர்ஜுனிடம் கம்பெனி ஒர்க்கர் ஒருவருக்கு அடிப்பட்டு விட்டது ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம் எனக் கூறுகின்றனர். உடனே அர்ஜுனும் ராகினியும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர் அங்கு டாக்டர் அந்த பேஷண்ட்க்கு சிகிச்சை அளிக்க முடியாது என சொல்லி விடுகிறார். 

ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

உடனே ராகினி நானும் டாக்டர் தான் நான் ட்ரீட்மென்ட் பண்றேன் என கூறுகிறார் அதற்கு அங்கு உள்ள நர்சுகள் மறுக்கின்றனர் முடியாது இங்க இருந்து வேற ஹாஸ்பிடல்  போறதுக்குள்ள அவருக்கு சீரியஸ் ஆயிடும் நான் ட்ரீட்மென்ட் பண்றேன் என சிகிச்சை செய்கிறார் அங்கு வந்த டாக்டர் ராகினியை நீ எப்படிம்மா ட்ரீட்மென்ட் பண்ணலாம் என திட்டுகிறார்.

திட்டி விட்டு பேஷன்டைப் பார்க்கிறார் பேஷண்ட்க்கு சரியான சிகிச்சை கொடுத்து இருப்பதால் ராகினியை பாராட்டி ஏம்மா உன் படிப்பை இப்படி வேலைக்கு போகாம வீணாக்குற நீ எங்கேயாவது டாக்டரா ப்ராக்டிஸ் பண்ணலாம்ல்ல என கூறுகிறார்.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

உடனே காரில் வரும்போது ராகினி அர்ஜுனிடம் நான் இனிமேல் ப்ராக்டிஸ் பண்ணலாம்னு இருக்கேன் என கூறுகிறார். அதற்கு அர்ஜுன் மறுக்கிறார். நீ ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சாலும் யாராவது ஒரு ஓனருக்கு கீழ கைகட்டி நின்னு தான் ஆகணும் அதனால வேணாம் என மறுக்கிறார்.

அடுத்த சீனில்  அனைவரும் சரஸ்வதியை ஜி எம் ஜி எம் என கிண்டல் செய்கின்றனர். பின்னர்  சரஸ்வதி சாப்பிடுகிறார் ஒரு வாய் வைத்ததும் வாமிட் வருகிறது உடனே வீட்டில் இருக்கும் அனைவரும் பயந்து சரஸ்வதியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போக சொல்லுகின்றனர். சரஸ்வதியும் தமிழும் ஹாஸ்பிடலுக்கு போகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Exit mobile version