கோதையைப் பற்றி தரமட்டமாக பேசி ராகினியிடம் வாங்கி கட்டிக் கொண்ட பரமன்.! மாமா என்று கூட பார்க்காமல் அடித்து வெளியே இழுத்து வந்த அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் பரபரப்பான எபிசோட்.

thamizhum saraswathiyum today episode september 15
thamizhum saraswathiyum today episode september 15

Thamizhum saraswathiyum today episode september 15 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி அர்ஜுன் மற்றும் பரமானிடம் எதற்காக அம்மாவை கேவலமாக பேசினீர்கள் என கேட்டுள்ளார், அதற்கு பரமு அர்ஜுன் பேசலா நான் தான் பேசினேன் என தன் மீது பழியை போட்டுக் கொள்கிறார் அதுமட்டுமில்லாமல் ராகினிஇடம்  பரமன் அந்த தமிழ் வந்து வம்பு இழுத்தான் அதனால தான் நாங்க பேசினோம் என கூற அதற்கு அப்படி இல்லையே நீங்க தான் ஃபர்ஸ்ட் அவங்கள வம்புக்கு இழுத்தீங்க என அபி கூற ராகினி துருவித் துருவி கேள்வி கேட்கிறார், அதற்கு அர்ஜுன் மழுப்புவது போல் இந்த விஷயத்தை இதோட விடுங்க அடிவாங்குன விட்டுட்டேன் நீங்க ஏன் எல்லாத்தையும் நோண்டிட்டு இருக்கீங்க என கூறிவிட்டு செல்கிறார் இதற்கு அபி இவங்க மேல எதோ தப்பு இருக்கு அதனால தான் இப்படி எதுவும் சொல்லாம கிளம்புறாங்க இதை கவனிச்சியா என ராகினிடம் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் கோதை சமைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வசு மற்றும் சரஸ்வதி இருவரும் உங்களுக்கு ஏன் இந்த கஷ்டம் இங்க வேற வியர்வை அதிகமாவே இருக்கும் நாங்களே சமைச்சுக்குறோம் எனக் கூற உங்களுக்கு வியர்க்காதா என பதிலுக்கு கேட்கிறார் பிறகு கோதை இன்னைக்கு நான் சமைச்சத கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவாங்க நான்தான் சமைச்சேன்னு என கூறுகிறார் அதற்கு சரஸ்வதி அது எப்படி முடியும் என கேட்கிறார் சரி ஓகே இன்னைக்கு பார்க்கலாம் என அனைவரும் கூறுகிறார்கள்.

அடுத்த காட்சியில் கார்த்தி மற்றும் நடேசன் இருவரும் சொத்தை வாங்குவது பற்றி வக்கீலிடம் பேசினீர்களா என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் நான் வேணான்னு சொன்னா நீங்க கேட்கல அவனெல்லாம் அவன் வழியிலேயே தான் போய் பிடிக்கணும் என தமிழ் கூறுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் அப்பொழுது தமிழ் கோதை சமைத்ததை சாப்பிட்டு பார்த்துவிட்டு இது நீயா சமைச்சா என சந்தேகத்தில் சரஸ்வதியிடம்  கேட்கிறார் அதற்கு அனைவரும் ஆமாம் என பொய் கூறுகிறார்கள்.

அதேபோல் தமிழ் கோதை சமைத்ததை கண்டுபிடித்து விடுகிறார் இதனை நீ சமைக்கலன்னு எனக்கு தெரியும் இதை யார் சமைச்சு இருப்பாங்க என்பதும் எனக்கு தெரியும் என கூறுகிறார் அடுத்த காட்சியில் அர்ஜுன் வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் மீன், நண்டு, சிக்கன் என அனைத்தும் இருக்குது ஒரு புடி புடிச்சுடனும் இத்தனை நாளா நாக்கு செத்து போன மாதிரி இருந்துச்சு அந்த கோதை அம்மா எப்ப பாரு புல்லு புண்ணாக்கு திங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்க நல்லாவே இல்ல அவங்கள அடிச்சு துரத்திட்டோம் என்பது போல் பேசுகிறார் ராகினி முன்பு.

இப்ப எதுக்கு அம்மாவ பத்தி பேசுறீங்க எங்க அம்மா மேல எனக்கு கோவம் இருக்கு அதனால பாசம் இல்லனு அர்த்தம் இல்ல அத மாதிரி நீங்க என்ன வேணாலும் பேசுவீங்க நான் அமைதியா இருப்பேன்னு நினைக்காதீங்க அர்ஜுன் பக்கம் நியாயம் இருந்ததால தான் எங்க அம்மா போகும்போது கூட நான் எதுவும் பண்ணல அதுக்காக எங்க அம்மாவை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனபேசுகிறார்.

உடனே அர்ஜுனும் ராகினி நம்புவது போல் பரமனை  திட்டுகிறார் ராகினி எனக்கு சாப்பாடு வேண்டாம் என உள்ளே சென்று விடுகிறார் பிறகு பரமனை அடித்து வெளியே இழுத்து வருகிறார். வெளியே வந்த பிறகு தேவையில்லாததை ஏன் பேசிட்டு இருக்கீங்க சொத்து முழுக்க ராகினி பெயரில் தான் இருக்கு நீங்க ரெண்டு பேரும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டீங்களா நான் சொத்த வேணா வாங்கி இருக்கலாம் ஆனா ராகினியை முழுசா லவ் பண்றேன் அவ வயித்துல என் குழந்தை இருக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்காதீங்க என எச்சரித்து விட்டு செல்கிறார்.

அதேபோல் தமிழ் தன்னுடைய தம்பி கார்த்தியை என்னோட கம்பெனிக்கு நீ வா என கூப்பிடுகிறார் அவரும் செல்கிறார் அங்கு போய் இனி இந்த யூனிட்டுக்கு தமிழ் கார்த்தி தான் எல்லா பொறுப்பையும் பார்த்துக் கொள்வார். எங்க வீட்ல இருக்குற பிரச்சனை உங்களுக்கு தெரியும்  என தமிழ் கூறுகிறார் உடனே அனைவரும் கார்த்திக் பொறுப்பு ஏற்றுக் கொள்வதை கூறியவுடன் கை தட்டுகிறார்கள் கார்த்தி கண் கலங்கி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.