தன் மகனைப் பார்த்து கண்ணீரில் மிதக்கும் கோதை.! தமிழ் எடுக்கப் போகும் அதிரடி முடிவு.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்

thamizhum saraswathiyum september 8
thamizhum saraswathiyum september 8

Thamizhum saraswathiyum September 8 episode  : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை மொட்டை மாடியில் நின்று கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததை நினைத்து கொண்டிருக்கிறார் அப்பொழுது நடேசன் வந்து நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் என்னடா தமிழ் நம்ம கிட்ட மட்டும் பேசலையே அப்படித்தான் நினைக்கிற அவன் ஆனா பழசு எல்லாம் மறந்துட்டு நார்மலா தான் இருக்கான் என நடேசன் கூறுகிறார் அதற்கு கோதை அவன் பேசணும்னு எதிர்பார்க்கிற தகுதி எனக்கு இருக்கா இல்லையான்னு கூட தெரியல என கூறுகிறார்.

உடனே நடேசன் அவன் எல்லாத்தையும் மறந்துட்டான் எல்லாரும் பழையபடி இருக்கலாம் கார்த்தி கிட்ட கூட சகஜமாக தானே பழகுறான் நீயே பார்த்தில்ல என பேசுகிறார். நான் ஏதாவது திமிரா ஆணவமா நடந்துக்கிற மாதிரி இருக்கா என கோதை கேட்க நானே அவன் கிட்ட போய் பேசலாம் என்று தான் நினைக்கிறேன் அவன் தள்ளி தள்ளி போகிறான் என கோதை கூறுகிறார். இது எல்லாமே சரியாயிடும் எல்லாமே நார்மலா மாறிடும் என கோதைக்கு ஆறுதல் கூறுகிறார் நடேசன்.

அந்த சமயத்தில் தமிழ் ஏதோ யோசித்து கொண்டு இருக்க தமிழை கோதை ஏக்கத்துடன் பார்க்கிறார். அப்பொழுது சரஸ்வதி வந்து தமிழிடம் உங்களிடம் ஒன்று கேட்கலாமா அத்தை மேல் இன்னும் உங்களுக்கு கோபம் போகலையா என கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என தமிழ் கூற உடனே சரஸ்வதி அப்ப பேச வேண்டி தானே ஒரு ரெண்டு வார்த்தையாவது பேசினாலே அவங்களுக்கும் ஒரு ஆறுதலா தெம்பாய் இருக்கும் இல்ல எனக் கூறுகிறார் அதற்கு தமிழ் என்னோட கடமை நான் கரெக்டா தானே செய்றேன் அப்புறம் என்ன தேவையில்லாத விஷயத்தில் மூக்கன் வைக்காத என பேசிவிட்டு தமிழ் சென்று விடுகிறார்.

உடனே வாசு அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா பேசிப்பாங்க நீங்க எதைப் பத்தியும் குழப்பிக்காதீங்க என சரஸ்வதிக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த சமயத்தில் நமச்சி மற்றும் ஆபி இருவரும் பெட்டை எடுப்பதாக ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பெட் கோதைக்கு மாமா அவங்க ஹாட் பேஷண்ட் என்பதால் தமிழ் தான் இங்கு கொண்டு வந்து போட சொன்னாரு என கூறுகிறார் இதனால் கோதையின் மனம் குளிர்கிறது.

அனைவரும் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கோதை எழுந்து தமிழை பார்க்கிறார் அப்பொழுது தன்னுடைய வீட்டையும் பார்க்கிறார் அந்த சமயத்தில் நடேசன் எழுந்து வருகிறார் இங்கே என் கோதை நிக்கிற எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க வா போகலாம் என கூற ஏன் ஒருத்தியால என் புள்ள எல்லாம் இப்ப பாரு வெளியில தூங்குது என அழுகிறார் எல்லாம் எனக்கு தெரியும் என ஆணவத்தில் இருந்துட்டேன் அதனால தான் எல்லாத்தையும் ஏமாந்து இழந்து நிற்கிறேன் என பேசுகிறார்.

அதற்கு ஆறுதல் கூறி நடேசன் அழைத்துச் செல்கிறார் அடுத்த நாள் காலையில் ஒவ்வொருத்தராக பாத்ரூம் செல்கிறார்கள் ஆனால் பாத்ரூம் செல்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஏனென்றால் ஒரே ஒரு பாத்ரூமில் அனைவரும் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் கார்த்தி நான் வேலைக்கு ட்ரை பண்ணுகிறேன் என வசுவிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அதேபோல் கோதை தமிழே பார்த்துக் கொண்டிருக்கிறார் அனைவரும் கஷ்டப்படுவதை தமிழ் பார்த்து இதற்கு ஏதாவது ஐடியா பண்ணலாம் என தமிழ் அதிரடியாக ஒரு முடிவு எடுக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.