முதன்முறையாக அர்ஜுனுக்கே பயத்தை காட்டிய கோதை.! வேர்த்து விறுவிறுத்து போய் நிற்கும் மாப்பிள்ளை.

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் சரஸ்வதி இடம் ரொமான்ஸ் செய்வதற்காக கெஞ்சுகிறார் ஆனால் சரஸ்வதி பிடி கொடுக்காமல்  சென்று விடுகிறார் இதனால் தமிழ் கோபமாக இருக்கிறார். அடுத்த நாள் கோதை நடேசன் இருவரும் நமச்சி அவர்களை நேரில் கூப்பிட்டுள்ளார்கள். நமைச்சியிடம் அர்ஜுனை பக்காவாக சிக்க வைக்க வேண்டும் என்றால் தெளிவான ஆதாரம் வேண்டும் என மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோதை என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது நான் சொல்வது போல் நீ செய்தால் கண்டிப்பாக அர்ஜுன் மாட்டிக் கொள்வான் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு வெளி ஆட்களை வைத்து அர்ஜுனுக்கு போன் செய்து நீ ஆள் வைத்த செட் செய்து கொண்டு உன்னையே குத்திக்கொண்டது எனக்கு தெரியும் அதை நான் பார்த்தது போல் பேச சொல்லு என கோதை கூறுகிறார் இதற்கு நானே பேசுகிறேன் எனக் கூற நீ பேசினால் மாட்டிக் கொள்வாய் அதனால் வேறு ஒருவரை வைத்து பேச வேண்டும் என பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் எல்லாரும் இருக்கும் பொழுது தான் போன் செய்ய வேண்டும் என கூறுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி வசு அவர்களிடம் போனில் நேற்று நடந்ததை கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் மிகவும் கோபமாக இருப்பதாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேவை இல்லாம எதற்கு சரஸ்வதி நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க ஃபர்ஸ்ட் தமிழ் மாமா கிட்ட சாரி கேளுங்க எந்த விஷயத்தில் எப்படி விளையாடனும்னு உங்களுக்கு தெரியாதா என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் கார்த்தி லேப்டாப்பில் ஒர்க் செய்து கொண்டிருக்கும் பொழுது வசு கார்த்தி இடம் இன்று ஜெக்கப் போக வேண்டும் மறந்துட்டியா என கேட்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறமா போகலாம் என பேசுகிறார். இல்லனா நீ அம்மாவை அழைச்சிட்டு போ எனக்கு வேலை இருக்கு உடனே வசு இல்ல நீ தான் வரணும் என பேசுகிறார் அந்த சமயத்தில் சரி ஓகே இந்த வேலையை நான் அர்ஜுனிடம் கொடுத்துவிடுகிறேன் என கூற வசு அதற்கு வேண்டாம் நீங்களே பாருங்க அவர் ஏதாவது குறுக்கு வழியில் செய்வார் அப்புறம் நீங்க தான் மாட்டிக்கிட்டு திட்டு வாங்குவிங்க என பேசுகிறார்.

பிறகு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமருகிறார்கள் அந்த சமயத்தில் நடேசன் நமச்சி அவர்களிடம் போன் செய்து இப்பொழுது ஃபோன் பண்ணு கரெக்டாக இருக்கும் என கூற நமச்சி  செட் பண்ணி நபர் அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கால் செய்கிறார் முதலில் போனை அட்டென்ட் செய்ய மறுக்க அடுத்ததாக போனை அட்டென்ட் செய்து பேசுகிறார் அப்பொழுது தமிழை திட்டம் போட்டு மாட்டி விட்டதை போனில் கூற அர்ஜுன் முகம் பதட்டம் ஆகிறது இதனை நடேசன் மற்றும் கோதை இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் என்னிடம் இருக்கும் ஆதாரம் வேண்டும் என்றால் பணத்தை எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வா என நமச்சி செட் பண்ணி ஆள் கூற உடனே அர்ஜுனும் நான் வருகிறேன் என கூறுகிறார். ஆனால் நடேசன் மற்றும் கோதை இருவரும் அர்ஜுனை தாக்குவது போல் பேசுகிறார்கள் இதனால் அர்ஜுன்முகம் பதட்டமாகிறது வியர்வை வேர்த்து கொட்டுகிறது இதன் மூலம் நடேசன் மற்றும் கோதைக்கு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. அர்ஜுன் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று மாட்டுவாரா இல்லை எளிதாக எஸ்கேப் ஆகி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மேலும் சரஸ்வதி தமிழிடம் சாரி கேட்டுக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment