நாலா பக்கமும் அர்ஜூனுக்கு சரஸ்வதி மற்றும் நமச்சி.! மாப்ள இனி நீ தப்பிக்க முடியாது. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

Tamizhum Saraswathiyum
Tamizhum Saraswathiyum

Tamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோவிலுக்கு சென்ற சரஸ்வதி இடம் ராகினி வாய்க்கு வந்தபடி பேசி உள்ளார். அதுமட்டுமில்லாமல் உனக்கு குழந்தையை பிறக்காது அப்படியே பொறந்தாலும் கொலைகார குழந்தை என பேசுவார்கள் என ராகினி சாபம் விட்டு விட்டு வந்து விட்டார். இதனை சரஸ்வதி தமிழிடம் கூற நம்மாட்சி கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் இனிமே அவங்கள பத்தி பேசுறத விட்டுவிடு என தமிழ் கூறிவிடுகிறார்.

ஆனால் சரஸ்வதி இந்த கொலைகார பழியை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என நமச்சியிடம் அர்ஜுனை ஃபாலோ பண்ண கூறுகிறார் அர்ஜுனையும் நமச்சி ஃபாலோ பண்ணுகிறார். ராகினி சரஸ்வதி இடம் தவறாக பேசியது வசு வுக்கு  தெரிய வர உடனே வசு ராகினிடம் கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் கோதை மற்றும் நடேசன் வர எதற்காக கத்துகிறாய் வசு எனக் கேட்க உடனே சரஸ்வதிக்கு குழந்தையே பிறக்கக் கூடாது எனவும் அப்படியே பிறந்தாலும் கொலைகார குழந்தை எனவும் ராகினி சரஸ்வதி இடம் சண்டை போட்டுள்ளார் என வசு நடேசன் இடம் கூற.

நடேசன் அது இந்த வீட்டோட வாரிசு அதை எப்படி நீ தப்பா பேசலாம் என திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் நீ உண்மையாலுமே டாக்டர் தான் படிச்சியா உனக்கு எப்படி இந்த மாதிரி புத்தி எல்லாம் வருது என ராகினியை திட்டுகிறார். இப்படி திட்டிக் கொண்டிருக்க கோதை அனைவரும் நிறுத்துங்க அவளுக்கு தான் பிடிக்காதுன்னு தெரியும்ல அப்புறம் ஏன் சரஸ்வதி ராகினியிடம் பேசினார் அதனால தான் இப்படி அவ பேசி இருக்கா என அமைதியாக இருக்க கூறுகிறார் கோதை.

பிறகு நடேசன் கோத இடம் நீயா இப்படி பேசியது என கேட்க உடனே கோதை இப்ப ஏதாவது பேசுனா ராகினி கோபப்படுவா அப்பறம் மயங்கி விழுந்துருவா ஏதாவது ஆகிடும் அதனாலதான் அப்படி பேசினேன் கண்டிப்பா மாப்பிள்ளை மேல தப்பு இருக்கு அதை எப்படியாவது நிரூபிக்கணும் அப்பதான் ராகினி நம்புவா அதன் பிறகு தான் ஒரு தெளிவுக்கு வருவா என பேசுகிறார் கோதை. மற்றொரு பக்கம் அர்ஜுன் தன்னுடைய நண்பன் இளங்கோவனை மீட் பண்ணுகிறார் இளங்கோ தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்பதால் இரண்டு லட்சம் அர்ஜுனிடம் கேட்க அதற்கு அர்ஜுன் ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என கூறி விடுகிறார்.

இதனால் கோபப்பட்ட அர்ஜுனனின் நண்பன் இளங்கோ. நீ செஞ்ச தப்புக்கு எல்லாத்துக்கும் நான் உடந்தையா இருந்தேன் இது மட்டும் உங்க மாமியார் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா என மிரட்டுகிறார் ஆனாலும் அர்ஜுன் மசியாமல் இதுக்கு மேல சுத்தமா பணம் தர முடியாது என கூறிவிட்டு செல்கிறார் இதனை நமச்சி கேட்டு விடுகிறார். நமச்சி உடனே சரஸ்வதி இடம் இதைப் பற்றி கூற சரஸ்வதி உமாபதி சாரிடம் 2 லட்சம் கடன் வாங்கி அதனை அர்ஜுன் ஃப்ரெண்ட் இளங்கோவிடம் கொடுத்து தமிழ் மீது எந்த தப்பும் இல்லை என நிரூபிக்க வேண்டும் முயற்சி செய்கிறார்கள்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.