பாலிவுட்டில் தடம் பதிக்கும் தமிழ் பிக்பாஸ் பிரபலம்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

தமிழ் சின்னத்திரையில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மகத். இவர் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தற்பொழுது சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்தியில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் நடிகர் மகத். மேலும் இந்த படத்தில் பாலிவுட் பிரபலங்களான சோனாக்ஷி சின்ஹா, ஹீமா குரோஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு முதாஸ்ஸர் அஜிஸ் கதை திரைக்கதையை எழுதி உள்ளார். இந்த படம் குறித்து நடிகர் மகத் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சினிமா என்பது பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணம் என நான் நம்புகிறேன் எனக்கு நீண்ட காலமாக இந்தி பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் இந்த ஸ்கிரிப்ட்டை படித்த பொழுது இது எனக்கான படம் என்று தெரிந்தது சத்ரம் ரமணி தான் எனக்கு இந்த படத்தை தந்தார் என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி.

mahat
mahat

நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது எனக்கு தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். கொஞ்சம் குண்டாக இருப்பது ஒருவரின் தோலின் நிறம் அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்முடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இந்த படம்.

இதில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குனர் சதிரம் ரமணி மற்றும் முதாஸ்ஸ அஜிஸ், சோனாக்ஷி சின்ஹா,  ஹீமா குரேஷி ஆகியோர்களுடன் பணி புரிந்தது அற்புதமான அனுபவம் ஒரு ஆணோ பெண்ணோ அவர் யாராக இருக்கிறார்கள்.. என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்த படம் அழுத்தமாக சொல்லும் எனக் கூறியுள்ளார். மேலும் ‘டபுள் எக்ஸ்எல்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment