pantiyan stores

முல்லை மற்றும் கதிர் ரொமான்ஸை ஒட்டுக்கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! இதல்லாம் ஒரு பொழப்பா என கூறும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களுள் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடகம்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பினை மக்களிடையே அழகாக எடுத்து சொல்லக் கூடியதாகும். இந்த நாடகத்தில் முல்லை தற்பொழுது பிரக்னன்டாக போகும் நிலையில் உள்ளதால் முல்லையை கதிர் மிக அழகாக பார்த்துக் கொள்கிறார்.

எப்பொழுதும் முல்லை நடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கதிர் அவரை கையோடு ஏந்திச் செல்வார், அதே போல் இன்று வெளியாகவுள்ள நாடகத் தொடரில் பகலிலேயே கதிர் முல்லையை கையோடு ஏந்திச் செல்கிறார் அதற்கு ,முல்லை யாராச்சும் பாத்துட்டாங்கள? என்று கேட்டு நான்தான் நடப்பேனே ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.

முல்லை, முடியாது நான் தான் தூக்கிச் செல்வேன் என்று கூறுகிறார் கதிர்.அதை தொடர்ந்து மேலும் கதிர் பெட்ரூமில் முல்லைக்கு உணவு ஊட்டுகிறார் அதற்கு முல்லை போதும் இதற்கு மேல் என்னால் சாப்பிட இயலாது என்று கூறுகிறார் அதற்கு கதிர் நீ இவ்வளவு நாள் கம்மியாக சாப்பிட்டாய் என்று எனக்கு தெரியாது, நான் தட்டில் போட்டு வந்த பிறகுதான் எனக்கே தெரிகிறது நீ இவ்வளவு கம்மியாக சாப்பிடுவாய் என்று நீ கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கூறுகிறார்.

கதிர் அதற்கு முல்லை எனக்கு தண்ணி வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிவிடும் ஆகையால் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறிவிட்டு கதிர் முல்லைக்கு உணவு ஊட்டி விடுகிறார். இப்படி அதிக ரொமான்ஸ் மற்றும் லவ் கலந்த காட்சிகளாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதனை எல்லாம் ஐஸ்வர்யா போட்டு கேட்கிறாள் மற்றொரு பக்கம் முல்லை குளிக்கச் சென்றார் அங்கிருந்து முல்லையை கதிர் தான் தூக்கிக் கொண்டு வருவார் என மீனா தனம், கண்ணன், ஜீவா ஆகியோர்களை அழைப்பு வந்து பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள்.

kayal kathir

கயல் பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் கதிர்.! வைரலாகும் வீடியோ.

நீண்ட காலமாக விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒன்று. இந்த நாடகத்திற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் சிறப்பு தான் ஆனால் இந்த சீரியல் மட்டும் தனி சிறப்பு மிக்கது, ஏனென்றால் இந்த நாடகம் அண்ணன் தம்பி ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று  முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிமுகமானார. அதன்பிறகு மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு கயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

பிறகு பல வருடங்கள் கழித்து  தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் முல்லையை கதிர் எவ்வாறு பார்த்துக் கொள்வார் இல்லை ஏதேனும் நடந்து முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிடப்பட்ட வீடியோவில்தான் கயல் வேடத்தில் நடிக்கும், அம்மா என்று கூறும் ஒரு சின்ன குழந்தையிடம் கதிர் தனது பெயரை உச்சரித்து கதிர் என்று கூறு என்கிறார் இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.